Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Friday, March 01, 2013

நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா?

கம்பும், கேழ்வரகும், சாமையும் சமைத்து சாப்பிட்ட மக்கள் படிப்படியாக அரிசி, கோதுமைக்கு மாறினார்கள். அதையும் விடுத்து இன்றைக்கு எந்தவித சத்துமே இல்லாத துரித உணவுகளை சாப்பிட்டு சத்துக்களற்ற மனிதர்களாக மாறிவருகின்றன.


பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு காய்கறியும், முட்டையும் சமைத்து கொடுத்த காலம் போய், நூடுல்ஸ், பாஸ்தா, ப்ரட் டோஸ்ட் ஜாம் என டப்பாக்களில் அடைத்து அனுப்புகின்றனர் அன்னையர்.

இந்த உணவுகள் இரண்டு நிமிடங்களில் தயாராகிவிடுகிறது என்னவோ உண்மைதான். ஆனால் அதனை சாப்பிடக் கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமற்ற சமுதாயத்தை உருவாக்கிவிடுகிறோம் என்பதே நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை.

குப்பையில் போடுங்கள்


ஒரு பாக்கெட் 10 ரூபாயில் தொடங்கி பாக்கெட் பாக்கெட்டாக வீட்டில் வாங்கி அடுக்கி வைத்திருக்கும் நூடுல்ஸை குப்பையில் போடும் உணவு என்று கூறுகின்றன ஆராய்ச்சிகள். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? மேலே படியுங்கள்.

ஆதாரத்தோடு நிரூபணம்

Saturday, February 23, 2013

மேலூர் அருகே 1000 பேர்களுக்கு விலையில்லா மிக்சி-கிரைண்டர்கள்: சாமி எம்.எல்.ஏ. வழங்கினார்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி யூனியன் அட்டப்பட்டி ஊராட்சியில் 1000 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன்களை ஆர்.சாமி எம்.எல்.ஏ. வழங்கினார்.


இவ்விழாவில் கொட்டாம்பட்டி யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், வைஸ் சேர்மன் குலோத்துங்கன், திட்ட அமலாக்கப் பிரிவு துணை ஆட்சியர் பாலசுப்பிரமணி, மேலூர் தாசில்தார் வசந்தா ஜுலியட் அட்டப்பட்டி ராஜா முகமது, கொட்டாம்பட்டி ஒன்றிய துணை செயலாளர் முத்தலீபு, தலைமைக் கழக பேச்சாளர் மலைச்சாமி, மாவட்ட கவுன்சிலர் குமாரதேவி சன்மார்க்கம், ஒன்றிய கவுன்சிலர் பாக்கியம், கரிகாலன், மனோகரன், பூங்கொடி மணவாளன், ரகமத்துல்லா,

மேலூர் அருகே 1000 பேர்களுக்கு விலையில்லா மிக்சி-கிரைண்டர்கள்: சாமி எம்.எல்.ஏ. வழங்கினார்ஊராட்சி துணை தலைவர் சீதாலெட்சுமி, ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கந்தன், பாலா, பக்குருதீன், வார்டு உறுப்பினர்கள் அபிமன்னன், கவிதா, நாகூர், முத்துலெட்சுமி, லதா, கல்யாணசுந்தரம், பாரதி திலகம், மூக்கம்மாள், அட்டப்பட்டி ஊராட்சி செயலாளர் கணேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அன்புடன்                                                       நன்றி; மாலைமலர்

 சக்தி

துபாயில் அஜீத்


கடந்த சில நாட்களாக துபாயில் தலைப்பிடப்படாத புதிய படத்திற்காக
அஜீத் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவர் டுகாட்டி டயாவெல் பைக்கை சினிமாவிற்காக ஓட்டியிருக்கிறார்.இந்தியாவில் ரேஸ் பைக், கார் ஓட்டத் தெரிந்த ஒரு சில நடிகர்களில் அஜீத் முதன்மையாக அறியப்படுபவர். பிற நடிகர்களைவிட ரேஸ்களில் பங்கேற்பதில் அதீத வெறி கொண்டவர்.

 ரேஸ்களில் பங்கேற்பத்தை அஜீத் தவிர்க்க வேண்டும் என்று ஒரு தயாரிப்பாளர் கூறியதற்கு பளார் கொடுத்த அளவுக்கு வார்த்தையால் பதிலடி கொடுத்தவர் அஜீத். இதன்மூலம் அவருக்கு ரேஸ் ஓட்டுவதில் இருக்கும் வெறி அப்பட்டமாக தெரியும்.அதே சமயத்தில் அவரது ரசிகர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்ளக்கூடியவர்.



கார், பைக் மட்டுமல்ல அதிவேக எந்திர படகுகளையும் லாவகமாக இயக்கத் தெரிந்தவர். விமானம் ஓட்டுவதற்கான பயிற்சிகளில் தீவிர முயற்சியுடன் ஈடுபட்டுள்ளார். அஜீத் வசம் சொந்தமாக நின்ஜா உள்ளிட்ட சூப்பர் பைக்குகள் இருக்கின்றன.


அன்புடன்
 சக்தி

Thursday, November 22, 2012

யார் இந்தஅஜ்மல் கசாப்?


  கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக படகு மூலம் மும்பையில் ஊடுருவிய லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள், ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து 60 மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படையினர், வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். இதில் 9 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.  இதில்  உயிருடன் பிடிபட்டவன்தான் இந்த கசாப்.

அஜ்மல் கசாப், பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பரித்கோட் என்ற கிராமத்தில் 1987, செப்.,13ம் தேதி பிறந்தான். முழுப்பெயர் முகமது அஜ்மல் அமீர் கசாப். பெயர் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பல பெயர்களில் இவன் அழைக்கப்பட்டான். பெற்றோர் ஷாபன் கசாப், நூர் இலாஹி. தந்தை பானி பூரி வியாபாரி. கசாபுக்கு இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.

2005ம் ஆண்டு, தந்தையுடன் சண்டையிட்டு, வீட்டை விட்டு வெளியேறினான். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தான். இவனுடன், 24 பேருக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டது. முதலில் உளவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்பட்டு, பின், படிப்படியாக நவீன ஆயுதங்களை கையாளுதல், இலக்கை தாக்குதல், கடலில் பயணம் செய்தல், நீச்சல், பாய்மர படகை இயக்குதல் போன்ற பயிற்சிகள் தரப்பட்டன.பயிற்சி பெற்ற குழுவிலிருந்து, சிறந்த 10 பேரை தேர்வு செய்து, மும்பை தாக்குதலை நடத்தினர். இதற்காக கசாப்புக்கு, 1.5 லட்சம் ரூபாய்

கொடுக்கப்பட்டது.

Friday, November 09, 2012

இஸ்லாமியர்களுக்கு எதிரான படமா விஸ்வரூபம்? - கமல் பதில்

எந்த மதத்துக்கும் நான் எதிரி இல்லை. விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதில்லை, என்று கமல்ஹாஸன் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் படம் ‘ஆரோ 3டி' ஒலி தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. டிரெய்லரை வெளியிட்டு கமலஹாசன் நிருபர்களிடம் பேசுகையில், விஸ்வரூபம்' இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான படமா? என்று கேட்டனர்.

அதற்கு கமல் பதிலளிக்கையில், "அப்படி நான் படம் எடுப்பேனா? இந்த படம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்லது. இந்தியாவில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனபதே என் விருப்பம்.
நான் காந்தியின் பக்தன். இங்கு எந்த மதத்தினர் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டேன். மனிதர்களைத்தான் பார்க்கிறேன். மதங்களை கொண்டாடுவது இல்லை. மனிதர்களை கொண்டாடுகிறேன். எந்த மதத்தினரையும் வித்தியாசமாக பார்ப்பது இல்லை. இந்த படமும் அப்படித்தான் இருக்கும். காந்தீய வழியிலேயே எனது அணுகுமுறைகளும் இருக்கும்," என்றார்.
அன்புடன்
 சக்தி

Thursday, October 04, 2012

துபாயில் இலவச வேலைவாய்ப்பு சேவைஇணையதளம்

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் சங்கம் சார்பில், இலவச வேலைவாய்ப்பு சேவை இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. வேலை தேடும் நபர்கள் இந்த இணையதளத்தில் தங்களின் விபரங்களை பதிவு செய்து பயன் பெறலாம்.

ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் சங்கம் சார்பாக இலவச வேலை வாய்ப்பு சேவை துவக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வேலை தேடுவோர் தங்களின் பெயர், முகவரி, செல்போன் எண் உட்பட முழு விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதன்மூலம் ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் சங்கத்தின் இணையதளத்திற்கு வந்து செல்லும் நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளும். தமிழ் சங்கத்தின் இணையதளத்தில் வெளியாகி உள்ள நபரை, ஏதாவது நிறுவனம் மூலம் தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்தால், இது குறித்த தகவல் அந்த நபருக்கு தெரிவிக்கப்படும்.
இந்த இலவச சேவையை அனைவரும் பயன்படுத்தி பயன்பெறுமாறு ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான ரமேஷ் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்கள் மற்றும் உதவிக்கு, www.uaetamilsangam.com/utshelpdesk.asp என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
வேலை தேடுவோர் தங்களின் விபரங்களை பதிவு செய்ய www.uaetamilsangam.com/Jobcandwanted.asp என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.
அன்புடன்
சக்தி

Friday, August 10, 2012

வளைகுடா நாடுகளில் பணிபுரிய ‌நேபாள பெண்களுக்கு தடை

  காத்மாண்டு: 30வயதுக்‌கு கீழ் உள்ள பெண்கள் வளைகுடா நாடுகளுக்கு சென்று பணி புரிவதற்கு நேபாள அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கிஷோர் ‌யாதவ் கூறியதாவது: நேபாள நாட்டைச்சேர்ந்த 30 வயதுக்கும் குறைவான பெண்கள் பெரும்பாலானோர் வளைகுடா நாடுகளில் வீட்டு பணிப்பபெண்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அங்கு பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக தொடர்ந்து புகார் வருவதையடுத்து அமைச்சரவை இம் முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ‌‌ வளைகுடா நாடுகளில் நேபாள நாட்டு பெண்கள் தவிர இலங்கை , பிலிப்பைன்ஸ் போன்ற நாட்டை சேர்ந்த பெண்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். நேபாள நாட்டு அரசு மட்டு‌மே 30 வயதுக்குட்பட்ட பெண்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிய தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஏற்கனவே இந்ததடை 1998 -ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கடந்த 2010-ம் ஆண்டு விலக்கிக்‌கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் அந்த தடை அமல்படுத்தபடுத்தப்பட்டுள்ளது.





அன்புடன்
 சக்தி

Thursday, July 26, 2012

மேலூரில் வாந்தி-வயிற்று போக்கு 70 பேர் பாதிப்பு

மேலூர் பகுதியில் வாந்தி-வயிற்று போக்கு காரணமாக 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.




அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலூரில் உள்ள அண்ணாகாலனி, முகமதியார்புரம், காந்திஜி பூங்கா ரோடு, நொண்டிகோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 70 பேருக்கு திடீரென வாந்தி-வயிற்று போக்கு ஏற்பட்டது. இவர்கள் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, இப்பகுதிகளில் குடிநீர் அசுத்தமாக வருகிறது. சுற்றுப்புற சுகாதாரமும் இல்லை. ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடப்பதால் கொசு தொல்லைகளும் அதிகரித்து உள்ளது. சுகாதாரமற்ற குடிநீரை குடிப்பதால் தான் இதுபோன்ற நோய் தாக்கப்படுகிறது. எனவே சுகாதாரதுறை அதிகாரிகள் உடனடியாக இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.



இதுபற்றி நகரசபை கமிஷனர் பாஸ்கரசேதுபதி கூறும்போது, வினியோகிக்கப்படும் தண்ணீர் சுத்தமாக தான் உள்ளது. இருப்பினும் தண்ணீரை ஆய்வுக்காக அனுப்பி இருக்கிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கெட்டுபோன மீன்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சமைத்து சாப்பிட்டதாலும், கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழத்தை சாப்பிட்டதாலும்தான் வாந்தி-வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கெட்டுபோன பொருட்களையோ கல் மூலம் பழுக்க வைத்த பழங்களையோ சாப்பிட வேண்டாம். கல் மூலம் பழுக்க வைத்த மற்றும் கெட்டுபோன பொருட்களை விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அன்புடன்
 சக்தி

யுடியூப்பில் இனி உண்மையான பெயரை வெளியிட வேண்டும்!




கூகுளின் பொழுதுபோக்குத் தளமான யுடியூப்புக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்களும் உறுப்பினர்களும் உள்ளனர். இந்த யுடியூப்பில் நினைக்கும் வீடியோக்களைப் பதிவேற்றம் செய்யலாம். மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களைப் பார்க்கலாம். அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். மேலும் அந்த வீடியோக்களுக்கு விமர்சனங்களும் எழுதலாம்.



ஒவ்வொரு நாளும் யுடியூப்பில் ஏராளமானோர் வீடியோக்களைப் பதிவேற்ற் செய்கின்றனர். அவ்வாறு பதிவேற்றம் செய்யும் போது ஒரு சிலர் தங்களது உண்மையான பெயர்களைக் குறிப்பிடுகின்றனர். ஆனால் பெரும்பாலோர் தங்களது புனைப் பெயர்களையேத் தருகின்றனர்.



மேலும் யுடியூப்பில் வரும் வீடியோக்களில் பெரும்பாலானவை ஆபாசமானதாகவும், அர்த்தமற்றதாகவும், இனவெறியைத் தூண்டுவதாகவும் உள்ளதாக ஏராளமான விமர்சனங்கள் வருகின்றன. இந்த வீடியோக்கள் பெரும்பாலும் புனைப் பெயர்களில் வருவதால் இதை பதிவேற்றம் செய்தவர்களைக் கண்டுபிடிப்பதும் கடினமாக இருக்கிறது.



ஆகவே தரமில்லாத மற்றும் அர்த்தமற்ற வீடியோக்களைக் களைய வேண்டும் என்பதற்காக கூகுள் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இனி யுடியூப்பில் எந்த வீடியோவை பதிவேற்றம் செய்தாலும் பதிவேற்றம் செய்பவர்கள் தங்களது உண்மையான பெயர்களைக் குறிப்பிட வேண்டும்.



மேலும் வீடியோக்களுக்கு விமர்சனம் எழுதுபவர்களும் தங்களது உண்மையான பெயர்களையே குறிப்பிட வேண்டும் என்று கூகுள் அறிவித்திருக்கிறது. அதற்காக அவர்கள் குகூள்+ல் சைன் அப் செய்ய வேண்டும்.



அவ்வாறு தங்களது உண்மையான பெயர்களை வெளியிட விரும்பாதவர்கள் ஒரு சில வாய்ப்புகளையும் வழங்குகின்றன. அதில் அவர்கள் தங்களுது பெயர்களை வெளியிடாததற்கான காரணங்களை அவர்கள் வெளியிட வேண்டியிருக்கும்.



இந்த அறிவிப்பின் மூலம் யுடியூப்பில் வீடியோக்களை வெளியிடுபவரைப் பற்றி கூகுள் அறிந்து கொள்ள விரும்புகிறது. மேலும் வரும் காலங்களில் யுடியூப்பில் பதிவேற்ற பெயரைக் குறிப்பிட வேண்டியது கண்டிப்பாகிவிடும் என்று தெரிகிறது.



எவ்வாறு பேஸ்புக்கில் உறுப்பினர்கள் தங்களது உண்மையான பெயர்களைக் குறிப்பிடுகிறார்களோ அதுபோன்றே யுடியூப்பிலும் நிகழ வேண்டும் என்று கூகுள் விரும்புகிறது. அது நடக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



அன்புடன்
 சக்தி

Saturday, June 23, 2012

மேலூரில் போதையில் ரோட்டில்கிடந்த 10ம் வகுப்பு மாணவர்

மேலூர்:மதுரை மாவட்டம் மேலூரில் எழுத்துக்களை அழிக்க பயன்படும் ஒயிட்னர்களை போதைக்கு பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு மாணவர் போதை அதிகரித்து புத்தக பையுடன் ரோட்டில் கிடந்தார்.தவறாக எழுதியதை அழிக்க "ஒயிட்னர்' என்ற கரெக்ஷன் புளூயிட் திரவம் பயன்படுகிறது. ரூ.30 கொடுத்து இவற்றை வாங்கும் மாணவர்கள் நூல்கண்டில் திரவத்தை ஊற்றி, கசக்கி நுகர்கின்றனர். தண்ணீர் பாக்கெட்டில் ஊற்றி வாயால் உறிஞ்சுகின்றனர். இதில் போதை ஏற்படுகிறது. அடிமையாகும் மாணவர்கள், நண்பர்களுக்கும் பழக்கி விடுகின்றனர்.நேற்று காலை மேலூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உசேன் பஜார் முன், பள்ளி மாணவர் ஒருவர், மயங்கி விழுந்தார். அவரை அருகில் உள்ள கடையில் படுக்க வைத்தனர். அவரது புத்தக பையை ஆராய்ந்த போது, மேலூரிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிப்பவர் என தெரிந்தது. ஒயிட்னர் என்ற டெலுட்டர், கரெக்ஷன் புளூயிட் பாட்டில்கள், நூல் கண்டு ஆகியவை புத்தக பையில் இருந்தன. மயங்கிய மாணவர் போதையில் இருந்தது தெரிந்தது. இவரை போல பல மாணவர்கள் இந்த போதைக்கு அடிமையாக இருப்பதாக மாணவர் கூறினார். சிறு வயதில் போதைக்கு அடிமையாகும் இம்மாணவர்கள் குறித்து ஆசிரியர்கள் விசாரித்து பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். வீட்டிலிருந்து செல்லும் குழந்தைகள் பள்ளிக்கு ஒழுங்காக சென்றார்களா என கண்காணிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் போதையால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
                                                          நன்றி தினமலர்

Thursday, June 14, 2012

மேலூர் அருகே வீடு புகுந்து தாக்க முயற்சி: கல்தூணில் கட்டி வைத்து வாலிபர்கள் மீது தாக்குதல்

 மேலூர் அருகே வீடு புகுந்து தாக்க முயற்சி: கல்தூணில் கட்டி வைத்து வாலிபர்கள் மீது தாக்குதல்
மேலூர், ஜூன் 10-
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு போலீஸ் சரகம் உறங்கான்பட்டியை சேர்ந்தவர் காசி. இவரது வீடு அருகே வசிப்பவர் ராஜேஸ்வரி. இவர்களுக்கிடையே பாதை தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் 3 பேர் ராஜேஸ்வரிக்கு ஆதரவாக காசியின் வீட்டுக்கு ஆயுதங்களுடன் சென்று தகராறில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்தவர்களை தாக்க முயன்றனர்.
இதனால் காசி குடும்பத்தினர் அலறி சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்களை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தப்பி ஓட முயன்றனர்.
உடனே அவர்களை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து ஊரின் மையப்பகுதியில் கல் தூணில் கட்டி வைத்து தாக்கினர். இதில் ஒருவர் மயக்கமடைந்தார். ராஜேஸ்வரியும் மயங்கி விழுந்தார்.
இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் ஆயுதங்களுடன் வந்து பொதுமக்களால் தாக்கப்பட்டவர்கள் மேலூர் அருகே உள்ள சருகுவலைய பட்டியை சேர்ந்த பாக்கியராஜ் (வயது22), இடைய வலசையை சேர்ந்த ரகு (20), சொக்கம்பட்டி ரமேஷ் (22) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து அரிவாள் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
தாக்கப்பட்டதில் மயக்கம் அடைந்த ராஜேஸ்வரி உள்பட 4 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காசி மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

அன்புடன்                                                                                                                                  நன்றி
                                                                                                                                                      மாலைமலர்
  சக்தி

Friday, June 01, 2012

டூப்ளிகேட் ஒபாமா (புகைப்படங்ககள்)


உலகத்தில் ஒருவரைப் போல ஏழு பேர் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டு வருகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா போல ஒருவர் இந்தோனேஷியாவில் இருக்கின்றார்.
இவர் அச்சொட்டாக ஒபாமா போல காட்சி கொடுக்கின்றார் என்று சொல்ல முடியாது. ஆனால் இவரின் உடல் அமைப்பு ஒபாமாவின் உடல் அமைப்பையே ஒத்திருக்கின்றது. இதனால் இவர் ஒபாமா போலவே நடந்து கொள்கின்றார்.
இதனால் டூப்ளிகேட் ஒபாமா என்று பிரபலம் அடைந்து இருக்கின்றார். இவரின் புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு தருகின்றோம்.








அன்புடன் சக்தி


Thursday, April 12, 2012

தண்ணீரில் விளக்கு எரியுமா?
ராசிபுரம் அருகே, 300 ஆண்டுகளுக்கும் மேல் கொண்டாடப்படும் பச்சைத்தண்ணி மாரியம்மன் கோவில் திருவிழாவில், தண்ணீரில் விளக்கு எரியும் அதிசியநிகழ்ச்சி, பக்தர்களை பரவசப்படுத்தி வருகிறது.

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தட்டான்குட்டையில், பிரசித்தி பெற்ற பச்சைத்தண்ணி மாரியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழைமையான இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு விழா, கடந்த 8ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, அன்று இரவு 10 மணிக்கு ஸ்வாமிக்கு பூச்சாட்டுதல் மற்றும் காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, மறுநாள் காலை 9 மணிக்கு சக்தி அழைத்தல், மாலை 4 மணிக்கு அலகு குத்துதல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு கரகம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு, கோவில் கிணற்றில் பூசாரி புனித நீராடி, சிறிய குடத்தில் தண்ணீர் எடுத்து வந்தார். அதை தொடர்ந்து, கோவில் முன் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த எண்ணெய் முழுவதையும் வடித்தார். பின்னர், கிணற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட பச்சைத் தண்ணீரை விளக்கில் ஊற்றி பற்ற வைத்தார். அப்போது, திரி கொழுந்து விட்டு எரிந்தது. இக்காட்சியை, சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கண்டு பரவசப்பட்டனர். தொடர்ந்து, ஒன்றரை மணி நேரம் எரியும் விளக்கு காலை 6 மணிக்கு எரிந்து அணைந்துவிடும். இந்நிகழ்ச்சி, ஆண்டு தோறும் ஒருநாள் மட்டும் தொன்று தொட்டு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 7 மணிக்கு கிடா வெட்டு நிகழ்ச்சியும், அன்று மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. பச்சைத்தண்ணி மாரியம்மன் ஸ்வாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.
இது குறித்து கோவில் பூசாரிகள் வெங்கட், நடேசன் ஆகியோர் கூறியதாவது: பச்சைத்தண்ணி மாரியம்மன் கோவில் திருவிழா, 300 ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கள் முன்னோர்கள் காலத்தில், ஒரு முறை கோவில் விளக்கில் இருந்து எண்ணெய் தீர்ந்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது ஊர் தர்மகர்த்தாவிடம் சென்று, விளக்குக்கு எண்ணெய் வாங்க பணம் கேட்டனர். அதற்கு அந்த தர்மகர்த்தா, "என்னிடம் காசு இல்லை எனக்கூறியதுடன், சக்தி உள்ள ஸ்வாமி மாரியம்மன் தானே; தண்ணீர் ஊற்றி பற்றவை எரியும்' என, விரக்தியில் கூறினார். அதை தொடர்ந்து, பூசாரிகள் தண்ணீர் ஊற்றி பற்றவைத்தனர். அப்போது தீ சுடர் விட்டு எரிந்ததை கண்டு ஆச்சரியப்பட்டனர். அன்று முதல் ஸ்வாமி பச்சைத்தண்ணி மாரியம்மன் என அழைக்கப்படுகிறது. ஸ்வாமிக்கு ஆண்டு தோறும் கோவில் திருவிழாவின் போது, தண்ணீர் ஊற்றி பற்றவைத்து வழிபாடு நடத்துவது, தொன்று தொட்டு நடந்து வருகிறது. அதன் கிளை கோவில், சேலம் ஐந்து ரோட்டிலும், மும்பையிலும் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அன்புடன்
சக்தி

Wednesday, April 11, 2012

தமிழீழ பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா ?


உலக அளவில் வாழும் எம் தமிழ் மக்கள்

அருள்கூர்ந்து இந்தப் பதிவினைச் செய்யுங்கள்
இது தமிழீழப் பொது வாக்கெடுப்பு நடத்தத்
தூண்டுதலாக இருக்கும்.

உங்கள் பதிவினை இன்றே செய்யுங்கள்
கீழுள்ள இணைப்பினைச் சொடுக்கி வாக்களியுங்கள்
தமிழீழ பொது வாக்கெடுப்பு
நண்பர்களுக்கும் அனுப்பவும்.
அன்புடன்
சக்தி

Friday, April 06, 2012

மிதக்கும் திரைஅரங்கம் [floating cinema]



மிதக்கும் திரைஅரங்கம்
 தாய்லாந்நாட்டில் கடலில் சுற்றிலும் மலைகள்   சூழ்ந்த இடத்தில் மிதக்கும் திரைஅரங்கம் ஒன்றை அமைத்துள்ளனர்.இந்த திரைஅரங்கத்தைச் சுற்றி மலைகள் அமைந்துள்ளத்தால் கடலலைகள் இல்லாமல் அமைதியாக படம் பார்க்கமுடியும்.










அன்புடன்
சக்தி

மனைவியை கத்தி முனையில் மிரட்டிய கணவன்


தாய்லாந்தில் சாக்டவுட் ஹாம்சிரி(Sakdawut Hamsiri) என்ற நபர் தனது மனைவியை பாங்காக் என்னும் இடத்தில் ஆறு மணிநேரமாக கழுத்தில் கத்தியை வைத்து அவரது மனைவியை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார்.











தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெகு நேரம் போராடி அவரது மனைவிவை காப்பாற்றியுள்ளனர். இதனை பார்த்த பொது மக்கள் செய்வதறியாது திகைத்த நிலையில் இந்த காட்சியைக் கண்டனர்.






சிரு காயங்களுடன் இவரது மனைவி உயிர்தப்பியுள்ளார். சாக்டவுட் ஹாம்சிரி(Sakdawut Hamsiri)யை கைது செய்த பொலிசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரனை நடத்தினர். விசாரனையில் இவர் போதை மருந்து அருந்தியதாக தெரியவந்துள்ளது






Wednesday, April 04, 2012

98 டன் தண்ணீரை வீணடித்த மூதாட்டி

சீனாவின் லயோனிங் மாகாணம் டாலியன் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கிராமத்தில் இருக்கும் அம்மாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்தார்.


மூதாட்டியின் பெயர் சாங்(68). கடந்த 3 மாதமாக மகன் வீட்டில் இருக்கும் அவர் 5 நிமிடத்துக்கு ஒரு முறை கழிவறைக்கு போய் வந்தது மகனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.



சமீபத்தில் இதுபற்றி விசாரித்தார். டாய்லெட்டுல ஒரு பெட்டி(ஃபிளஷ் டேங்க்) இருக்கிறதே. அதன் மேல் இருக்கும் சுவிட்சை அழுத்தினால், குபுக்கென்று தண்ணீர் வெளியேறும் சத்தம் கேட்கிறது.



இந்த சத்தம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. ஊரில் வாய்க்கால் ஓடுவது போலவே இருக்கிறது. அந்த சத்தத்தை நாள் முழுக்க கேட்க வேண்டும் போல இருந்தது. காசா, பணமா? 5 நிமிடத்துக்கு ஒருமுறை சென்று அழுத்திவிட்டு, அருகிலேயே நின்று தண்ணீர் சத்தத்தை கேட்டுவிட்டு வருவேன் என்றார்.



கிராமத்திலேயே இருந்த அவர் முதல் முறையாக நகருக்கு வந்தவர். ஃபிளஷ் டேங்குடன் கூடிய டாய்லெட்டை அப்போது தான் முதல் முறையாக பார்த்திருக்கிறார் என்று தெரியவந்தது. கடந்த 2 மாதத்தில் 98 டன் தண்ணீரை வீணாக்கிவிட்டார் என்று சீனா டெய்லி நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அன்புடன்
சக்தி

உலகின் மிக வயதான பெண் மருத்துவர் மரணம்


உலகின் மிக வயதான பெண் மருத்துவர் லையிலா டென்மார்க், தனது 114 வயதில் மரணமடைந்துள்ளார்.

இவர் அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர், கடந்த 1898-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் திகதி பிறந்தார், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஆவார்.



இவர் உலகின் மிகவும் வயதானவர்களில் 4-வது நபர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார்.

மருத்துவரான இவர் அட்லாண்டா மாகாணத்தில் கடந்த 1931-ம் ஆண்டு பயிற்சி மருத்துவராக சேர்ந்து 70 ஆண்டுகள் மருத்துவ சேவை புரிந்து கடந்த 2001-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1-ம் திகதியன்று(ஞாயிறு) இவர் இறந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இவர் இறந்த போது இவருக்கு வயது 113 வருடம் 312 நாட்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.


அன்புடன்
சக்தி

Sunday, April 01, 2012

பாம்பிடம் விளையாடும் சிறுவர்கள்

பாம்பைக்கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். இங்கு ஒரு சிறுவனைக் கண்டு பாம்பு நடுங்குவதைப்பாருங்கள்.பயமின்றி பாம்பிடம் விளையாடும் சிறுவர்கலைபார்த்தால் பார்ப்பவர்களுக்குத்தான் பயம் வரும்.
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியை விட்டு ஒரு மணி தூரப் பயணத்தில் ஃபரிதாபாத் என்ற கிராமத்தில் வசிக்கும் புத் நாத்(65) என்பவர் பாரம் பரியமாக பாம்பு பிடித்து வித்தை காட்டி வாழ்பவர்.



இவர் பாம்பு பிடிக்கும் பேடியா இனத்தை சேர்ந்த இவர் தன்னுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தாலும் பாம்பு பிடிக்கும் வித்தையை கற்றுக் கொடுக்கத் தவறுவதில்லை.

தனது 2 வயது பேரன் சுமித்துக்கு பாம்பு வித்தைகளைக் கற்றுத் தரும் இவரின் பிள்ளைகள் பாம்புகளை உடல் மீது படரவிட்டு விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டனர்.




பள்ளிக் கூடத்துக்குப் போவதை விட பாம்புகளுடன் இருக்கவே அதிகம் விரும்புகின்றனர்.


























அன்புடன் சக்தி

Monday, March 26, 2012

துப்பாக்கி சண்டையில் மரணம் அடைந்த வீரரை, அவரது கர்ப்பிணி காதலி திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளது பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரான்சில் கடந்த வாரம் முகமது மீரா(வயது 23) என்ற தீவிரவாதி பள்ளிக்கூடத்திலும், அதற்கு அருகில் உள்ள இடங்களிலும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்.







இதில் துணை இராணுவ வீரர் அபெல் சென்னூப், 3 பள்ளி குழந்தைகள், ஆசிரியை உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். இதன் பின்னர் அவரது வீட்டில் பதுங்கியிருந்த முகமதுவை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.



இந்நிலையில் வக்கீல் கில்பர்ட் கொலார்ட் என்பவர் கூறியதாவது: துப்பாக்கிச் சூட்டில் இறந்த வீரர் அபெல் சென்னூப்பின் 21 வயது காதலி கரோலின் மோனெட். தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். இறந்த தனது காதலனை சட்டப்படி திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார்.







இறந்த ஒருவருடன் திருமணம் செய்து கொள்வது வழக்கத்தில் இல்லாதது. ஆனால் சில அசாதாரண சூழ்நிலையில் இது போன்ற திருமணத்துக்கு அனுமதி அளிப்பது ஜனாதிபதியின் முடிவை பொறுத்தது.



இதற்கு முன் இறந்த காவல்துறையினர் இரண்டு பேரின் காதலிகளுக்கு இது போல் திருமணம் நடந்துள்ளது. இதுபோன்ற திருமணத்தின் போது மணமகள் இருக்கைக்கு அருகில் மற்றொரு இருக்கை அமைக்கப்படும்.



அதில் மணமகன் இருப்பது போல் நினைத்து திருமண சடங்குகள் நடக்கும். இதன் மூலம் பிறக்க போகும் குழந்தைக்கு சட்டப்பூர்வமான தந்தையாக சென்னூப் கருதப்படுவார்.


















அன்புடன் சக்தி