Friday, March 01, 2013

உயிர் பிரியும் தருவாயிலும் ஏழுமலையான் பக்தர்களை காப்பாற்றிய பாஷா


திருப்பதி நகரம் ஓட்டேரைச் சேர்ந்தவர் மஸ்தான் பாஷா (வயது40) கார் டிரைவராக உள்ளார். இவர் கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்களை காரில் ஏற்றிச் செல்லும் பணியில் பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.


நேற்று மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களை தனது காரில் திருமலைக்கு அழைத்து சென்றார்.

இரண்டு வளைவுகளை தாண்டினால் கோவிலை சென்றடைய முடியும் என்ற நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சை பிடித்தபடியே காரை ஓட்டினார்.
செய்கையால் நெஞ்சு வலிப்பதை காரில் வந்த பக்தர்களிடம் தெரிவித்த அவர் காரின் வேகத்தை குறைத்து மெதுவாக ஒரு தடுப்பு சுவரில் மோதி நிறுத்தினார். காரில் இருந்த பக்தர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சு வருவதற்குள் மஸ்தான் பாஷா பரிதாபமாக இறந்தார்.

உயிர் பிரியும் தருவாயிலும் ஏழுமலையான் பக்தர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மஸ்தான்பாஷா செயல்பட்டது காரில் வந்தவர்களை கண்ணீர் மல்க வைத்தது
அன்புடன்
 சக்தி

நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா?

கம்பும், கேழ்வரகும், சாமையும் சமைத்து சாப்பிட்ட மக்கள் படிப்படியாக அரிசி, கோதுமைக்கு மாறினார்கள். அதையும் விடுத்து இன்றைக்கு எந்தவித சத்துமே இல்லாத துரித உணவுகளை சாப்பிட்டு சத்துக்களற்ற மனிதர்களாக மாறிவருகின்றன.


பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு காய்கறியும், முட்டையும் சமைத்து கொடுத்த காலம் போய், நூடுல்ஸ், பாஸ்தா, ப்ரட் டோஸ்ட் ஜாம் என டப்பாக்களில் அடைத்து அனுப்புகின்றனர் அன்னையர்.

இந்த உணவுகள் இரண்டு நிமிடங்களில் தயாராகிவிடுகிறது என்னவோ உண்மைதான். ஆனால் அதனை சாப்பிடக் கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமற்ற சமுதாயத்தை உருவாக்கிவிடுகிறோம் என்பதே நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை.

குப்பையில் போடுங்கள்


ஒரு பாக்கெட் 10 ரூபாயில் தொடங்கி பாக்கெட் பாக்கெட்டாக வீட்டில் வாங்கி அடுக்கி வைத்திருக்கும் நூடுல்ஸை குப்பையில் போடும் உணவு என்று கூறுகின்றன ஆராய்ச்சிகள். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? மேலே படியுங்கள்.

ஆதாரத்தோடு நிரூபணம்

Saturday, February 23, 2013

மேலூர் அருகே 1000 பேர்களுக்கு விலையில்லா மிக்சி-கிரைண்டர்கள்: சாமி எம்.எல்.ஏ. வழங்கினார்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி யூனியன் அட்டப்பட்டி ஊராட்சியில் 1000 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன்களை ஆர்.சாமி எம்.எல்.ஏ. வழங்கினார்.


இவ்விழாவில் கொட்டாம்பட்டி யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், வைஸ் சேர்மன் குலோத்துங்கன், திட்ட அமலாக்கப் பிரிவு துணை ஆட்சியர் பாலசுப்பிரமணி, மேலூர் தாசில்தார் வசந்தா ஜுலியட் அட்டப்பட்டி ராஜா முகமது, கொட்டாம்பட்டி ஒன்றிய துணை செயலாளர் முத்தலீபு, தலைமைக் கழக பேச்சாளர் மலைச்சாமி, மாவட்ட கவுன்சிலர் குமாரதேவி சன்மார்க்கம், ஒன்றிய கவுன்சிலர் பாக்கியம், கரிகாலன், மனோகரன், பூங்கொடி மணவாளன், ரகமத்துல்லா,

மேலூர் அருகே 1000 பேர்களுக்கு விலையில்லா மிக்சி-கிரைண்டர்கள்: சாமி எம்.எல்.ஏ. வழங்கினார்ஊராட்சி துணை தலைவர் சீதாலெட்சுமி, ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கந்தன், பாலா, பக்குருதீன், வார்டு உறுப்பினர்கள் அபிமன்னன், கவிதா, நாகூர், முத்துலெட்சுமி, லதா, கல்யாணசுந்தரம், பாரதி திலகம், மூக்கம்மாள், அட்டப்பட்டி ஊராட்சி செயலாளர் கணேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அன்புடன்                                                       நன்றி; மாலைமலர்

 சக்தி

துபாயில் அஜீத்


கடந்த சில நாட்களாக துபாயில் தலைப்பிடப்படாத புதிய படத்திற்காக
அஜீத் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவர் டுகாட்டி டயாவெல் பைக்கை சினிமாவிற்காக ஓட்டியிருக்கிறார்.இந்தியாவில் ரேஸ் பைக், கார் ஓட்டத் தெரிந்த ஒரு சில நடிகர்களில் அஜீத் முதன்மையாக அறியப்படுபவர். பிற நடிகர்களைவிட ரேஸ்களில் பங்கேற்பதில் அதீத வெறி கொண்டவர்.

 ரேஸ்களில் பங்கேற்பத்தை அஜீத் தவிர்க்க வேண்டும் என்று ஒரு தயாரிப்பாளர் கூறியதற்கு பளார் கொடுத்த அளவுக்கு வார்த்தையால் பதிலடி கொடுத்தவர் அஜீத். இதன்மூலம் அவருக்கு ரேஸ் ஓட்டுவதில் இருக்கும் வெறி அப்பட்டமாக தெரியும்.அதே சமயத்தில் அவரது ரசிகர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்ளக்கூடியவர்.



கார், பைக் மட்டுமல்ல அதிவேக எந்திர படகுகளையும் லாவகமாக இயக்கத் தெரிந்தவர். விமானம் ஓட்டுவதற்கான பயிற்சிகளில் தீவிர முயற்சியுடன் ஈடுபட்டுள்ளார். அஜீத் வசம் சொந்தமாக நின்ஜா உள்ளிட்ட சூப்பர் பைக்குகள் இருக்கின்றன.


அன்புடன்
 சக்தி

Thursday, January 24, 2013

மலேஷியாவில் விஸ்வரூபம் வெளியிடப்பட்டது.

கமல்ஹாசன் நடிப்பிலும் இயக்கத்திலும் தயாரிக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் திரைப்படம் முஸ்லிம்களைத் தீவிர வாதிகளாகச் சித்தரிக்கிறது என்று தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் 15 நாள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலேஷியாவில் அப்படம் இன்று வெளியாகியுள்ளது.


மலேஷியாவில் அரங்கு நிறைந்த முதல் காட்சி வெற்றியை படம் கண்டுள்ளது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மலேஷியாவை அடுத்துள்ள சிங்கப்பூரிலும் மாலைக்காட்சிகளில் படம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது/
இந்தப் படத்தை த‌ணிக்கை செய்த மலேஷிய தணிக்கை வாரிய உறுப்பினர் தெ‌ரி‌வி‌க்கை‌யி‌ல், விஸ்வரூபம் படத்தை வெளியிட அனுமதித்த தணிக்கை வாரிய ஆய்வாளரும் முஸ்லிம் பெயருடையவரே என்றும், படத்தில் எந்த ஒரு சிறுபான்மையினருக்கு எதிராகவும் எதுவும் இல்லை என்று கூறினார்.
முன்னதாக, சிங்கப்பூர் தணிக்கை வாரியம் இப்படத்தை அனுமதிப்பது பற்றி இந்தியாவின் கருத்தை எதிர்நோக்கியிருந்தது.
அன்புடன் சக்தி