Thursday, November 22, 2012

யார் இந்தஅஜ்மல் கசாப்?


  கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக படகு மூலம் மும்பையில் ஊடுருவிய லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள், ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து 60 மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படையினர், வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். இதில் 9 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.  இதில்  உயிருடன் பிடிபட்டவன்தான் இந்த கசாப்.

அஜ்மல் கசாப், பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பரித்கோட் என்ற கிராமத்தில் 1987, செப்.,13ம் தேதி பிறந்தான். முழுப்பெயர் முகமது அஜ்மல் அமீர் கசாப். பெயர் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பல பெயர்களில் இவன் அழைக்கப்பட்டான். பெற்றோர் ஷாபன் கசாப், நூர் இலாஹி. தந்தை பானி பூரி வியாபாரி. கசாபுக்கு இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.

2005ம் ஆண்டு, தந்தையுடன் சண்டையிட்டு, வீட்டை விட்டு வெளியேறினான். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தான். இவனுடன், 24 பேருக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டது. முதலில் உளவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்பட்டு, பின், படிப்படியாக நவீன ஆயுதங்களை கையாளுதல், இலக்கை தாக்குதல், கடலில் பயணம் செய்தல், நீச்சல், பாய்மர படகை இயக்குதல் போன்ற பயிற்சிகள் தரப்பட்டன.பயிற்சி பெற்ற குழுவிலிருந்து, சிறந்த 10 பேரை தேர்வு செய்து, மும்பை தாக்குதலை நடத்தினர். இதற்காக கசாப்புக்கு, 1.5 லட்சம் ரூபாய்

கொடுக்கப்பட்டது.

Monday, November 19, 2012

துபாயில் அடுக்கு மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

Jumeirah Lake Towers (JLT
துபாயில்,34அடுக்கு மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.துபாயில், "ஜுமிரா லேக் டவர்ஸ்' என்ற கட்டடத்தில், நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 34 அடுக்குகள் கொண்ட இந்த கட்டடத்தில் தங்கியிருந்தவர்கள், உடனடியாக மீட்கப்பட்டனர்.
எனவே, யாரும் காயமடையவில்லை. ஆனால், கட்டடத்தில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமாயின.மேலும் கட்டடத்தின் கீழே இருந்த கார்களும் சேதமானது . தீ விபத்துக்கான காரணம் குறித்து, விசாரணை நடக்கிறது




அன்புடன்
சக்தி

Wednesday, November 14, 2012

‘தீபாவளி ஸ்பெசல்' லேகியம்

தீபாவளிக்கு எண்ணெய் பலகராமும், நெய்யில் செய்த பட்சணங்களையும் ஒரு கட்டு கட்டியிருப்போம். திடீரென்று அதிக அளவில் எண்ணெய் பலகாரங்களை சாப்பிட்டதால் வயிறு கடா முடா என்று ஒரு வழி செய்து விடும். அஜீரணக் கோளாறு வேறு அவஸ்தையை ஏற்படுத்திவிடும். இதில் இருந்து தப்பிக்க கைவசம் ‘தீபாவளி ஸ்பெசல்' லேகியம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவேண்டும் என்கின்றனர் அனுபவஸ்தர்கள்.


தீபாவளி லேகியம் செய்ய தேவையானப் பொருட்கள்
பெருங்காயம் - 25 கிராம்பேரிச்சை - கால் கிலோ
வெல்லம் - 100 கிராம்சீரகம் - 3 டீ ஸ்பூன்வால்மிளகு - 2திப்பிலி - 2
நெய் - 25
உப்பு - கால் டீ ஸ்பூன்
செய்முறை
பேரிச்சையை சுடுதண்ணீரில் நன்கு ஊறவைத்து, கொட்டையை நீக்கி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
வெல்லம் தவிர சீரகம், திப்பிலி, வால்மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை பொடி செய்யவும்.
அடுப்பில் கடாயை வைத்து வெல்லத்தை பொடித்து போடவும். நெய் சேர்த்து கரைந்த உடன் பேரிச்சையை போடவும். இதனுடன் பொடித்து வைத்துள்ள கலவையைப் போட்டு கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். உப்பு சேர்த்து நன்கு கிளறவேண்டும். கலவை திரண்டு திக்காகி அல்வா பதம் உடன் இறக்கி ஆறவைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
தீபாவளி லேகியம் சாப்பிடுவதன் மூலம் அஜீரணம் ஏற்படாது, வயிறுப் பொருமல் இருக்காது. சளி பிடிக்காது.
இதேபோல் மிளகு, இஞ்சி, ஓமம், திப்பிலி, கொத்தமல்லி, மஞ்சள்தூள், கசகசா, இலவங்கம், ஏலம், வெல்லம், நெய், நல்லெண்ணெய் சேர்த்து வேறு விதமாகவும் தீபாவளி லேகியம் செய்யலாம்.
தீபாவளி லேகியம் கையில் இருந்தால் தைரியமாக தீபாவளி பலகாரத்தை ஒரு பிடி பிடிக்கலாம்.
அன்புடன்
 சக்தி

Friday, November 09, 2012

இஸ்லாமியர்களுக்கு எதிரான படமா விஸ்வரூபம்? - கமல் பதில்

எந்த மதத்துக்கும் நான் எதிரி இல்லை. விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதில்லை, என்று கமல்ஹாஸன் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் படம் ‘ஆரோ 3டி' ஒலி தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. டிரெய்லரை வெளியிட்டு கமலஹாசன் நிருபர்களிடம் பேசுகையில், விஸ்வரூபம்' இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான படமா? என்று கேட்டனர்.

அதற்கு கமல் பதிலளிக்கையில், "அப்படி நான் படம் எடுப்பேனா? இந்த படம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்லது. இந்தியாவில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனபதே என் விருப்பம்.
நான் காந்தியின் பக்தன். இங்கு எந்த மதத்தினர் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டேன். மனிதர்களைத்தான் பார்க்கிறேன். மதங்களை கொண்டாடுவது இல்லை. மனிதர்களை கொண்டாடுகிறேன். எந்த மதத்தினரையும் வித்தியாசமாக பார்ப்பது இல்லை. இந்த படமும் அப்படித்தான் இருக்கும். காந்தீய வழியிலேயே எனது அணுகுமுறைகளும் இருக்கும்," என்றார்.
அன்புடன்
 சக்தி