Sunday, September 30, 2012

துபாய் மருத்துவமனையில் 3 ஆண்டுக்கும் மேல் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதியவர்

துபாய்: துபாய் மருத்துவமனையில் திருநெல்வேலி அருகேயுள்ள பாப்பையாபுரத்தைச் சேர்ந்த சுடலைமுத்து ராஜகோபால் ( வயது 71 ) எனற முதியவர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இருதய பாதிப்பு மற்றும் பக்கவாதத்தின் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) சார்பில் அதன் ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத் சந்தித்தார்.

திருநெல்வேலி அருகேயுள்ள பாப்பையாபுரத்தைச் சேர்ந்தவ சுடலைமுத்து ராஜகோபால். வயது 71. கடந்த 1976ம் ஆண்டு துபாய் வந்ததாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்படும் வரை டிரைவராக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார். தனக்கு பத்மா மற்றும் சுந்தராம்பாள் ஆகிய இரு மனைவிகள் இருப்பதாகவும் அவர்களில் மூத்த மனைவிக்கு ஐந்து குழந்தைகளும், இரண்டாவது மனைவிக்கு நான்கு குழந்தைகளும் இருப்பதாக தெரிவித்தார். மூத்த மனைவி பத்மா தன்னைக் காண துபாய் வந்திருப்பதாகவும், இரண்டாவது மனைவி சுந்தராம்பாள் புதுக்கோட்டையில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார். இவர் சிலநேரம் மனநலம் சரியில்லாதவரைப் போல் பேசுகிறார். எனவே இவர் கூறும் தகவல்கள் எந்த அளவு உணமையானது எனத் தெரியவில்லை.
ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி மற்றும் அதன் துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா ஆகியோரது முயற்சியில் இந்திய கன்சுலேட்டின் உதவியின் மூலம் தாயகத்தில் உள்ள அவரது குடும்பத்தினருடன் சேர்ப்பிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறு அவரை எவரும் ஏற்றுக்கொள்ள இயலாத பட்சத்தில் ஏதேனும் ஒரு ஆதரவற்றோர் இல்லம் தமிழகத்தில் ஏற்றுக்கொள்ள முன்வருமானால் அங்கு சேர்த்திட முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவரைப் பற்றிய முழு தகவல்கள் தெரிந்தவர்கள் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளை 050 51 96 433 / 050 467 43 99 எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்து உதவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

அன்புடன் சக்தி

Friday, September 14, 2012

பாவம் நடிகைகள்...!:

முன்பெல்லாம் சினிமாவில் கவர்ச்சி காட்டி நடிப்பதற்கென தனியாக சில காட்சிகளில் சில நடிகைகள் வந்து போவார்கள், அவர்களுக்கு கவர்ச்சி நடிகை என்றும் பெயர். ஆனால் இப்போது கதாநாயகிகளே போதும், போதும் என்று பயப்படுமளவிற்கு கவர்ச்சி காட்டி, நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். துட்டுக்கு ஏற்ற கவர்ச்சி என்பதால், மீட்டர் ஏற, ஏற உடுத்தியிருக்கும் உடையின் அளவு குறைவதுதான் கவலைக்குரிய அம்சமாகிவிட்டது. சினிமாவிற்கு பெரிய பட்ஜெட் போடுபவர்கள் நடிகைகளின் உடைகளுக்கு மட்டும் ‘துண்டு’ பட்ஜெட் போடுவதை பார்த்து வெறுத்துப் போன ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் இது.
அன்புடன்Photo Gallery
 சக்தி

மதுரையில் புல்லட் "தீ' வண்டி


 மதுரையில், தீயணைப்பு வண்டி சென்று அணைக்க முடியாத இடங்களில், புல்லட்டில் சென்று தீயை அணைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தீயணைப்பு வண்டியால் குறுகலான இடங்களுக்கு சென்று, உடனடியாக தீயை அணைக்க முடிவதில்லை. இதைதவிர்க்க, டூவீலரில் 9 லிட்டர் ரசாயனம் கலந்த நீரை எடுத்துச் சென்று, நுரையாக பீய்ச்சி அணைக்கும் முறை அறிமுகப்படுத்த தீயணைப்புத் துறை முடிவு செய்தது.

 தற்போதைக்கு தல்லாகுளம் நிலையத்திற்கு ஒரு புல்லட் "தீ' வண்டி வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.6.7 லட்சம். இதற்கென தனி வீரர் இன்னும் நியமிக்கப்படவில்லை. இதற்கும் தொடர்பு எண் 101 தான்
மதுரையில் பல பகுதிகள் குறுகலாகவும், சிறியதாகவும் இருப்பதால், உடனடியாக இதை அமல்படுத்த வேண்டிய அவசியம் என தினமலர் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக, புல்லட்டில் சென்று தீயை அணைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அன்புடன்
 சக்தி