Friday, February 24, 2012

ஆப்கானிஸ்தானில் புனித நூலான குரான் எரிக்கப்பட்டது

  ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் ஒன்றில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டது ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளின் முக்கிய தளமான பக்ராம் விமான தளத்தில் குப்பை பெருக்கும் ஆப்கானியர்கள் குப்பை பெருக்கும் போது எரிக்கப்பட்ட குரானின் தாள்களை கண்டனர். இச்செய்தி வெளியானவுடன் அமெரிக்க படையினர் சார்பில் விசாரணை நடத்தி குரான் எரிக்கப்பட்டது உண்மை என்றும் அதற்காக மன்னிப்புகேட்டுகொள்வதாகவும் அறிவித்தனர்.


குரான் எரிக்கப்பட்டதாக கூறி 60க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள் விமானப்படை தளம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆப்கன் படையினர், அமெரிக்க ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றுள்ளனர். இதுமட்டுமல்லாது, இந்நிகழ்வு நாடு முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுடதொர்பாக, அதிபர் பாரக் ஒபாமா, ஆப்கன் அதிபர் கர்சாய்க்கு எழுதியுள்ள கடிதத்தில், சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், அமெரிக்க வீரர்களின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது <உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனிதநூலான குர்ஆன் எரிக்கப்பட்டது துரதிர்ஷ்டமான சம்பவம் என்று வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஜே கார்னி தெரிவித்துள்ளார்.



இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.





 





அன்புடன்
சக்தி

Friday, February 10, 2012

ஜீன்ஸ் பேண்ட் அணிந்தால் ஆண்மை குறைவு?

 தினந்தோறும் ஜீன்ஸ்பேன்ட் அணிபவர நீங்கள் அப்படியெனில் இது உங்களுக்குத்தான் படியுங்கள்.ஜீன்ஸ்பேன்ட் அணிவது இன்று நாகரீகத்தின் அடையாளமாக உள்ளது.ஆனால் ஜீன்ஸ்பேன்ட் அணியும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு வரவாய்ப்புள்ளது.இந்தியா போன்ற பெப்பமான நாடுகளுக்கு இந்தஉடையால்  உடலுக்கு அதிகமான 
பெப்பத்தை உண்டாக்கி 
அதன்மூலம் பல தோல் வியாதிகளை உருவாக்குவதோடு ஆண்மைக்குறைவையும் ஏற்படுத்துகிறது .ஆண்களின் உயிரணுக்களை கணிசமான அளவுக்குக் குறைத்து, அவர்களுக்கு சந்ததி உருவாகும் வாய்ப்பையே குறைக்கிறது.மேலும் இந்த உடையால்  ஆண்களுக்கு மட்டும்மன்றி பெண்களுக்கும் மாதவிலக்கு பிரச்சனைகளையும் மலட்டுத்தன்மைகளையும் ஏற்படுத்துகிறது.எனவே  ஜீன்ஸ்பேன்ட் அணிவதை குறைத்துக்கொள்ளுங்கள்.குளிர் பிரேதேசங்களில்  உள்ளவர்களுக்கு பிரச்சனை கிடையாது.

அன்புடன்
சக்தி

Friday, February 03, 2012

டைட்டானிக் கப்பல்பற்றிய புதிய செய்தி (படங்கள் இணை ப்பு)

அட்லான்டிக் கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கி 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி சமீபத்தில் டைட்டானிக் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதுகடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதி இங்கிலாந்தின் சவுதாம்டன் பகுதியில் இருந்து டைட்டானிக் சொகுசு கப்பல் நியூயார்க் புறப்பட்டது.



உலகிலேயே மிக பிரமாண்டமான முதல் சொகுசு கப்பலான டைட்டானிக் தனது முதல் பயணத்திலேயே வடக்கு அட்லான்டிக் கடலில் மிகப்பெரிய பனிப்பாறையில் 15ம் திகதி மோதி விபத்துக்குள்ளானது. கப்பலில் பயணம் செய்த 2,223 பேரில் 1517 பேர் உயிரிழந்தனர். இது உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய கப்பல் விபத்தாக இன்றளவும் உள்ளது.

கடந்த 1997ம் ஆண்டு வெளிவந்து உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் டைட்டானிக். உலக புகழ் பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியனார்டோ டிகாப்ரியோ, கேத் வின்ஸ்லெட் உள்பட பலரும் நடித்த படம்.


இதில் ஒரு காட்சியில் கப்பல் உடைய தொடங்கிய பிறகு பயணிகள் பீதியுடன் இங்கும் அங்கும் ஓடுவார்கள். உயிர் பிழைப்பதற்காக மீட்பு படகுகளில் ஏறுவார்கள். அப்போதுகூட கப்பலின் பேண்ட் வாத்திய குழுவினர் பதற்றப்படாமல் வயலின் வாசிப்பார்கள்.கப்பல் மூழ்கும் வரை அவர்களது இசை தொடரும். இது வெறும் காட்சி மட்டுமல்ல உண்மையான நிகழ்வு ஆகும். பேண்ட் வாத்திய கலைஞர்கள் 8 பேர் கடைசி வரை இசைக் கருவிகள் வாசித்ததாக அப்போது பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. அப்போது மூழ்கிய வயலின் தற்போது கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை அக்கப்பலில் இருந்த பேண்ட் மாஸ்டர் வாலஸ் ஹர்ட்லி பயன்படுத்தி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

வாலஸ் ஹர்ட்லி என்ற இசைக் கலைஞர், தனது வயலினை அணைத்த நிலையிலேயே கடலில் மூழ்கினார். அந்த நிலையிலேயே அவரது உடல் மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அந்த வயலின்தான் தற்போது கிடைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்தை சேர்ந்த ஒருவரிடம் இந்த வயலின் பல ஆண்டு காலமாக இருந்துள்ளது. வாலசுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண் மரியா ராபின்சன், டைட்டானிக் விபத்து நடந்த சில ஆண்டுகளில் இதை தன்னிடம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். டைட்டானிக் வயலின் குறித்த இதர தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.