Friday, August 10, 2012

மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..

லண்டன்: மனிதர்களின் உயிரியல் பெயர் ஹேமோ சேப்பியன்ஸ் (Homo sapiens).




பரிணாம வளர்ச்சியில் ஒரு செல் உயிரிகளில் இருந்து பல வகையான உயிர்கள் உருவாயின என்பது டார்வினின் கொள்கை.



அவ்வாறாக 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இப்போதைய மனித இனமான ஹேமோ சேப்பியன்ஸ் உருவானது என்கிறது பரிணாம விதி எனப்படும் evolution theory.



ஆனால், அப்போது ஹேமோ சேப்பியன்ஸ் மட்டுமல்ல, மேலும் ஒரு மனித இனமும் இருந்தது என்பதை இப்போது கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.



கென்யா நாட்டின் துர்கானா ஏரியின் படுகையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மனித இனத்தின் எலும்புக் கூடுகளின் படிமங்கள் (fossil) கிடைத்துள்ளன.



துர்கானா ஏரிப் பகுதியில் தான் ஏராளமான மிகப் பழமையான மனித உடல்களின் படிமங்கள் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன. இதனால் இந்தப் பகுதிக்கு 'மனித குலத்தின் தொட்டில்' (cradle of mankind) என்ற பெயரே உண்டு.



இங்கு இப்போது கிடைத்துள்ள மனித உடல் படிமங்களை ஆராய்ந்ததில், அவை ஹேமோ சேப்பியன்ஸ் இனத்தின் படிமம் அல்ல என்பது தெரியவந்துள்ளது. மாறாக அவை மனித இனத்தின் இன்னொரு வகையான உயிர் என்பது தெரியவந்துள்ளது.



ஏற்கனவே 40 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற ஒரு படிமும் கிடைத்து. அதற்கு '1470' என அடையாளப் பெயர் சூட்டப்பட்டது. இப்போது மீண்டும் அதே போன்ற ஒரு படிமம் கிடைத்துள்ளது.



இந்த மனித வகையினரின் மூளை மிகப் பெரிதாக இருந்துள்ளதும், தலை நீண்டு இருந்ததும், அதே நேரத்தில் முகம் வட்ட வடிவமின்றி ஒடுங்கி இருந்ததும், கீழ் தாடை மிக மிக பலமானதாகவும் இருந்ததும் தெரியவந்துள்ளது.



மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படுபவை ஹோமோ எரெக்டஸ் (Homo erectus), ஹேமோ ஹபிலிஸ் (Homo habilis) ஆகியவை. இதிலிருந்து பரிமாண வளர்ச்சி அடைந்தே ஹேமோ சேப்பியன்ஸ் என்ற இப்போதைய மனித இனம் உருவானது.






இந் நிலையில் இப்போது கிடைத்துள்ள படிமங்களை ஆராய்ந்ததில் அது இன்னொரு வகையான மனித இனம் என்பது உறுதியாகியுள்ளது. இதற்கு Homo rudolfensis என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முன்னணி உயிரியல் அகழ்வாராய்ச்சி விஞ்ஞானியான பேராசிரியர் மீவ் லீக்கி தலைமையிலான டீம் தான் இந்த படிமத்தை துர்கானா ஏரியின் 10 கி.மீ. தொலைவில் தோண்டியெடுத்துள்ளது. இதற்கு Homo rudolfensis என பெயர் சூட்டியுள்ள இந்தக் குழு, இந்தப் படிமங்கள் 1.78 மில்லியன் முதல் 1.95 மில்லியன் ஆண்டுகள் வரை பழமையானது என்றும் கூறியுள்ளது.
கீழ் தாடை மிக பலமானதாகவும், முகம் ஒடுங்கியும் இருப்பதைப் பார்த்தால், இந்த இனம் கடிப்பதில் மிக சிறந்ததாக இருந்திருக்க வேண்டும். இந்த இனமும் ஹோமோ சேப்பியன் மனித இனமும் ஒரே காலகட்டத்தில் வசித்துள்ளனர் என்கிறார் மீவ் லீக்கி.

இந்த ஹோமோ எரெக்டஸ், ஹேமோ ஹபிலிஸ், ஹோமோ ருடால்பெனிஸ், ஹோமோ சேப்பியன்ஸ் ஆகிய எல்லா இனங்களுமே சிம்பன்சிக்கள், போனோபோஸ் ஆகிய குரங்கு இனங்களில் இருந்து தான் உருவாயின என்பது தான் பரிணாம விதி சொல்லும் கோட்பாடாகும்

அன்புடன்
 சக்தி

வளைகுடா நாடுகளில் பணிபுரிய ‌நேபாள பெண்களுக்கு தடை

  காத்மாண்டு: 30வயதுக்‌கு கீழ் உள்ள பெண்கள் வளைகுடா நாடுகளுக்கு சென்று பணி புரிவதற்கு நேபாள அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கிஷோர் ‌யாதவ் கூறியதாவது: நேபாள நாட்டைச்சேர்ந்த 30 வயதுக்கும் குறைவான பெண்கள் பெரும்பாலானோர் வளைகுடா நாடுகளில் வீட்டு பணிப்பபெண்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அங்கு பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக தொடர்ந்து புகார் வருவதையடுத்து அமைச்சரவை இம் முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ‌‌ வளைகுடா நாடுகளில் நேபாள நாட்டு பெண்கள் தவிர இலங்கை , பிலிப்பைன்ஸ் போன்ற நாட்டை சேர்ந்த பெண்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். நேபாள நாட்டு அரசு மட்டு‌மே 30 வயதுக்குட்பட்ட பெண்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிய தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஏற்கனவே இந்ததடை 1998 -ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கடந்த 2010-ம் ஆண்டு விலக்கிக்‌கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் அந்த தடை அமல்படுத்தபடுத்தப்பட்டுள்ளது.





அன்புடன்
 சக்தி