Friday, October 26, 2012

ம‌துரை- துபாய் இடையேயான நேர‌டி விமான‌ போக்குவரத்து

வ‌ளைகுடாவில் ப‌ணியாற்றும் தென் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் ப‌ல்லாண்டு க‌ன‌வான  ம‌துரை- துபாய் இடையேயான  நேர‌டி விமான‌ போக்குவரத்து  நிறைவேறும் சூழ்நிலை உருவாகி உள்ள‌து.மதுரையில் இருந்து துபாய், சார்ஜா ஆகிய பகுதிகளுக்கு விமானம் இயக்குவது குறித்த கலந்து ஆலோசனை கூட்டத்திற்கு ஈடிஏ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் துபாயில் உள்ள‌ த‌மிழ் அமைப்புக‌ள் ம‌ற்றும் ஏர் இந்தியா நிறுவ‌ன‌ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்ட‌த்தில் ஏர் இந்தியா உள்நாட்டு மேலாள‌ர் மோக‌ன் பாபு, விற்ப‌னை மேலாள‌ர் ஆஸ்லி ரெவ்லோ, ஷார்ஜா விமான‌ நிலைய‌ மேலாள‌ர் க‌ண்ண‌ன், ஏர் இந்தியா துபாய் ச‌ர்வ‌தேச‌ மேலாள‌ர் ராதாகிருஷ்ண‌ன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஈடிஏ ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டு துறை நிர்வாக‌ இய‌க்குனர் அக்ப‌ர்கான், ஈடிஏ வியாபாரம் மற்றும் கப்பல் துறை இய‌க்குந‌ர் நூருல் ஹ‌க், ஈடிஏ மத்திய கணக்கு துறை மேலாள‌ர் ஹ‌மீதுகான், ஈடிஏ த‌லைமை அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் மீரான், அமீர‌க‌த்தில் உள்ள‌ த‌மிழ‌க‌ அமைப்புக‌ள் சார்பில் ஜெக‌ந்நாத‌ன், அக‌ம‌து முகைதீன், கீழைராஸா, ஹ‌மீது ர‌ஹ்மான், ய‌ஹ்யா முகைதீன், கீழையாசீன், முதுவை ஹிதாய‌த் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.
கலந்துரையாடல் கூட்டத்தில், அமீர‌க‌த்தில் 2 ல‌ட்ச‌ம் த‌மிழ் பேசும் ம‌க்க‌ள் வசிக்கின்ற‌ன‌ர். இவ‌ர்க‌ளில் தென் த‌மிழ‌க‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் நீண்ட‌தூர‌த்தில் உள்ள‌ விமான‌ நிலைய‌ங்க‌ளில் இருந்து த‌ங்க‌ளின் ஊர்க‌ளுக்கு செல்ல அவதிப்படுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் ம‌துரையில் இருந்து துபாய், சார்ஜா போன்ற‌ ந‌க‌ர‌ங்க‌ளுக்கு விமான‌ங்க‌ள் இய‌க்க‌ப்பட்டால், ஏர் இந்தியாவுக்கு லாப‌க‌ர‌மான‌ வான் வ‌ழியாக‌ அமையும் என்றும், கேர‌ளாவிற்கு அதிக‌ விமான‌ங்க‌ள் இய‌க்கப்படுவ‌து போல் த‌மிழ‌க‌த்திற்கும் இய‌க்க‌ வேண்டும் என்றும், அதற்கான அனைத்து ஒத்துழைப்பும் ஈடிஏ மற்றும் த‌மிழ் ச‌ங்க‌ங்க‌ள் சார்பில் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Thursday, October 04, 2012

துபாயில் இலவச வேலைவாய்ப்பு சேவைஇணையதளம்

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் சங்கம் சார்பில், இலவச வேலைவாய்ப்பு சேவை இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. வேலை தேடும் நபர்கள் இந்த இணையதளத்தில் தங்களின் விபரங்களை பதிவு செய்து பயன் பெறலாம்.

ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் சங்கம் சார்பாக இலவச வேலை வாய்ப்பு சேவை துவக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வேலை தேடுவோர் தங்களின் பெயர், முகவரி, செல்போன் எண் உட்பட முழு விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதன்மூலம் ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் சங்கத்தின் இணையதளத்திற்கு வந்து செல்லும் நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளும். தமிழ் சங்கத்தின் இணையதளத்தில் வெளியாகி உள்ள நபரை, ஏதாவது நிறுவனம் மூலம் தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்தால், இது குறித்த தகவல் அந்த நபருக்கு தெரிவிக்கப்படும்.
இந்த இலவச சேவையை அனைவரும் பயன்படுத்தி பயன்பெறுமாறு ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான ரமேஷ் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்கள் மற்றும் உதவிக்கு, www.uaetamilsangam.com/utshelpdesk.asp என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
வேலை தேடுவோர் தங்களின் விபரங்களை பதிவு செய்ய www.uaetamilsangam.com/Jobcandwanted.asp என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.
அன்புடன்
சக்தி