Saturday, December 24, 2011

உலகின் மிக வயதான யோகா ஆசிரியர்




அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 91 வயதான பெண்மணி ஒருவர், உலகின் மிக வயதான யோகா ஆசிரியர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.


பெர்னிஸ் பேட்ஸ் என்ற அப்பெண்மணி கடந்த 50 வருடங்களாக யோகா செய்து வருகிறார். அவருக்கு 70, 80 மற்றும் 90 வயதுகளில் மாணவர்களும் உள்ளனர்.



யோகா தனக்கு பலத்தையும், எதையும் அனுபவிக்கும் தன்மையையும் அளிப்பதாக பேட்ஸ் தெரிவித்துள்ளார்.









91 வயதான பேட்ஸ் தற்போதும் எடைகளை தூக்குதல், நீச்சலடித்தல் உட்பட பல உடற்பயிற்சிகளையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது







அன்புடன் சக்தி

Saturday, December 17, 2011

உப்பில் உருவான சாதனை ஓவியம்

சமையல் செய்யும் பொழுதுமட்டுமே உப்பை பயன்படுத்தும் பெண்களுக்கு மத்தியில் உப்பை பயன்படுத்தி வேலூரை சேர்ந்த சதீஷ் என்ற தொழில் அதிபர் மனைவி சரிதா 84 சதுர மீட்டர் பரப்பளவில் 7 வண்ணங்களில் மிகப் பெரிய ஓவியம் தீட்டி சாதனை படைத்துள்ளார் .

உலக வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட இந்த ஓவியம் எலைட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.






வேலூரை சேர்ந்த இவர் படிக்கும் போதே ஓவியப் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றவர்.



7 மீற்றர் அகலமும், 12 மீற்றர் உயரமும் கொண்ட 84 சதுர மீற்றர் பரப்பளவில் 9 மணி நேரத்தில் மிகப் பெரிய ஓவியம் வரைவதற்கு கோவையில் உள்ள எலைட் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு அனுமதி பெற்றார்.



3 மணி நேரத்துக்கு 15 நிமிடம் ஓய்வு என்ற நிபந்தனையுடன் இரு முறை மட்டும் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர் 8 மணி 15 நிமிடங்களில் தனது சாதனையை நிறைவு செய்தார்.

இது குறித்து "எலைட்' உலக சாதனை நிறுவனத்தின் நிறுவனர் பிரதீப் குமார் கூறுகையில்,""எலைட்' உலக சாதனை நிறுவனத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 10 ஆயிரத்து, 800 சாதனையாளர்கள் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 96 நாடுகளில், 11 உலக சாதனைகள் செய்யப்பட்டுள்ளது,'' என, கூறினார்.


பின்னர், "எலைட்' உலக சாதனை செய்த சரிதாவுக்கு சான்றிதழை, "எலைட்' நிறுவன நிறுவனர் பிரதீப் குமார் வழங்கினார். வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சீனியர் உதவி விரிவுரையாளர் டாக்டர் கோமதி. சமையல் கலை வல்லுனர் மல்லிகா பத்திரி நாத், கலெக்டர் நாகராஜன் மனைவி லாவண்யா, சி.எம்.சி., தலைமை மருத்துவர் டாக்டர் நிகால் தாமஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







Friday, December 02, 2011

துபாய் வர்த்தகசபையில்( Dubai Chamber of Commerce and Industry)நடந்த ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற தமிழர்


 "திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற பொன்மொழிக்கேற்ப
 பல நாடுகளில் பணிபுரியும் நம் தமிழர்கள். அந்நாடுகளில்
பல சாதனைகளையும் புரிந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.அந்தவகையில் துபாய்வர்த்தகசபையில்(dubai chamber of commerce)நடந்தஓவியப்போட்டியில் ஒரு தமிழர் வெற்றிபெற்றுள்ளார்.


துபாய் தேசிய நாள் விழா (dubai national day)துபாய் வர்த்தக சபையில் கொண்டாடப்பட்டது.இதில் அங்கு பணிபுரியும் அதிகாரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும்அங்குபணிபுரியும்அதிகரிகளுக்கிடையில் ஓவியப் போட்டியும்நடைபெற்றது.இதில் தமிழ்நாட்டைச்சேர்ந்த மேலாளர் ஒருவர் வரைந்தஓவியத்திற்குமுதல்பரிசு கிடைத்தது



முதல் பரிசு பெற்ற ஓவியம்




போட்டியில் பங்குபெற்ற ஓவியங்கள்