Friday, June 08, 2012

துபாயில் த‌மிழ‌ர் பார‌ம்ப‌ரிய‌ க‌ப‌டி விளையாட்டு


துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்து வரும் பெர‌ம்ப‌லூர் மாவ‌ட்ட‌ம் வி.களத்தூர் மற்றும் மில்லத்நகர் மக்கள் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பாக‌ “வி.களத்தூர் சங்கமம் 2012” என்னும் நிகழ்ச்சி துபாஉ முஸ்ரிப் பூங்காவில் 24-02-2012 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிமுதல் மாலை 6.00 மணிவரை ந‌டைபெற்ற‌து.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை விழாக்குழுவின் வரவேற்புக்குழுவினர் வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சவுதி அரேபியாவிலிருந்து சுலைமான், துபை ஈமான் அமைப்பின்  துபாயில் த‌மிழ‌ர் பார‌ம்ப‌ர்ய‌ க‌ப‌டி விளையாட்டுட‌ன் களைகட்டிய “வி.களத்தூர் சங்கமம் 2012“பொதுச்செயலாளர் குத்தாலம் லியாக்கத் அலி, இணைப் பொதுச் செயலாளர் முஹம்மது தாஹா, ஊடகத்துறை ம‌ற்றும் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் முதுவை ஹிதாயத், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் மொய்தீன் அப்துல் காதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ’கபடி விளையாட்டு’ முக்கிய இடம் பிடித்தது. இந்நிக‌ழ்வு பூங்காவில் குழுமியிருந்த‌ அரபு மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

இதுதவிர, ’பின்னோக்கி ஓடுதல், கலர் பந்து பொறுக்குதல் உள்ளிட்ட செயலுக்கும் மூளைக்கும் வேலைகொடுக்கும் போட்டியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வி.களத்தூர் மட்டுமல்லாது அக்கம் பக்க ஊர்வாசிகளும் கலந்து கொண்டனர். ஆகிய ஊரைச் சேர்ந்தவர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.


அன்புடன்
 சக்தி

No comments: