Friday, October 28, 2011

ஒரு தேசியத்தலைவரை சாதியத்தலைவராக்கிய அரசியல்


படிமம்:PMThevar.gif

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று சொன்னவர்  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.இவர் ஜாதி தலைவர் இல்லை. அரசியல்வாதிகளில் அப்பழுக்கற்றவர்.

 சுதந்திர போராட்ட வீரர்,


 கடைசிவரை திருமணமே

செய்துகொள்ளாமல் தனது சொத்துக்களை மக்களுக்கே கொடுத்த தியாகி.
இந்து தாய்க்கு பிறந்து, இஸ்லாமிய பெண்ணால் வளர்க்கப்பட்டு, கிறிஸ்தவ பாதிரியார்களால் கல்வி பெற்றவர்.



அடுத்தவரின் பணம் ஒரு ரூபாய்க்கு கூட ஆசைப்படாத ஆன்மீகவாதி. தேசியமும்

தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று சொன்ன அற்புத மனிதர். இப்படிப்பட்ட ஒருவரை

 இந்த தேசியத் தலைவரை சிலர் தங்களின் சுய

லாபத்திற்காக ஜாதித்தலைவராகத் திரித்துவிட்டது வருத்தம் தரும் விஷயமாக

இருக்கிறது.
இன்று குறிப்பிட்ட ஜாதிமக்கள் மட்டுமே  இவரைப்போற்றுகின்றனர்.
உண்மையில்  இவர் எல்லோருக்கும்  பொதுவானதேசியத் தலைவர். 


பசும்பொன் தேவர் 4000 நாட்களை சிறையிலேயே கழித்தார்.
1960 ல் புளிச்சிகுளத்தில் தனக்கு சொந்தமான எஸ்டேட்டில் தங்கி இருந்த தேவர், திருச்சுழி பதிவாளரை, தம் இருப்பிடத்திற்கு அழைத்து ஓர் இனாம் சாசனத்தை பதிவு செய்தார். அதில் தன்னுடைய சொத்துக்களை 17 பங்காகப் பிரித்து அவற்றில் ஒரு பாகத்தை தனக்கு வைத்துக்க் கொண்டு மீதி 16 பங்கை 16 பேருக்கு எழுதி வைத்தார்.அதில் பசும்பொன்னை சேர்ந்த அரிஜன வகுப்பில் பிறந்த வீரன், சந்நியாசி, என்ற இருவருக்கும் இரண்டு பாகங்களை ஒதுக்கி பசும்பொன் தேவர் பத்திரப் பதிவு செய்தார். ஆம்! தன்னுடைய சொத்துக்களை அனுபவிக்கும் உரிமையில் இரண்டு அரிசனங்களுக்கும் எழுதி வைத்த பெருந்தகையாளர் பசும்பொன் தேவர்.















அன்புடன் சக்தி

Friday, October 21, 2011

.மழை நீரில் நனையாமல் மக்களைக் காக்கும் சிலை










மர்லின் மன்றோ. உலகம் முழுவதும் ரசிகர்களின் கவர்ச்சிப் புயலாக  வலம் வந்தார்.


ஹாலிவுட் திரையுலகை 1947 முதல் 1962 வரை கலக்கியவர் மர்லின் மன்றோ. உலகம் முழுவதும் ரசிகர்களின் கவர்ச்சிப் புயலாக  வலம் வந்தார். தனது 36-வது வயதில் அவர் மர்மமாக மரணம் அடைந்தார். விஷம் தின்று தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. இன்னும் சிலர் அவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் கிளப்பினர்.
மர்லின் மன்றோ மூன்று பேரை திருமணம் செய்து விவாகரத்து செய்தார். அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான்கென்னடியுடனும் இணைத்து பேசப்பட்டார்  மர்லின் மன்றோவின் 26 அடி உயரமான சிலையொன்று அமெரிக்காவின் சிகாக்கோ நகரில் கடந்தஜூலை மாதம்  திறந்துவைக்கப்பட்டுள்ளது. துருப்பிடிக்காத இரும்பு மற்றும் அலுமினியத்தாலான இந்த சிலை 15422 கிலோகிராம் எடையுடையது. சேவார்ட் ஜோன்ஸன் எனும் சிற்பக் கலைஞர் இச்சிலையை உருவாக்கியுள்ளார். 1955 ஆம்ஆண்டு வெளியான த செவன் இயர் இட்ச் எனும் திரைப்படத்தில் வரும் மர்லின் மன்றோவின் வெகு பிரபல்யம் பெற்ற காட்சியொன்றை சித்தரிக்கும் விதத்தில் இச்சிலை வடிமைக்கப்பட்டுள்ளது. மேற்படி திரைப்படக் காட்சியில் மர்லின் மன்றோ அணிந்திருந்த வெள்ளை கவுண் கடந்த மாதம் 46 லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச்சிலைஇன்று.மழை நீரில் நனையாமல் மக்களைக் காக்கும் சிலை ஆகிப்போனது 
  
  

அன்புடன் சக்தி

Friday, October 14, 2011

வணக்கம் தோழர்களே...




ஒரு புறம் மக்கள் உணவின்றி சாக... மற்றோர் புறம் கோவில்களில் செல்வங்கள் குவிந்து கிடக்கிறது.



தங்கள் அடிப்படை வசதிகளை கூட பெற்றுக்கொள்ள இயலாமால் தவிக்கும் மக்கள் மத்தியில் சாமிகளுக்கு செல்வங்களை அள்ளி கொடுக்கிறார்கள்



சாமி கும்பிடுகிறேன், பிரசாதம் படைக்கிறேன், மொட்டை அடிக்கிறேன் காணிக்கைகள் செலுத்துகிறேன், தங்கத்தில் சிலை வைக்கிறேன், கோயில் கட்ட நிதி கொடுக்கிறேன், நகைகள் சாத்துகிறேன்....... இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். அவ்வளவு செய்கிறார்கள் கோயில்களுக்கு (சாமிக்கு) மக்கள். போதாக்குறைக்கு தங்கள் தலைகளில் தேங்காய் உடைக்கிறார்கள்.



இது மட்டுமா? சாமிக்கு மட்டுமில்லாமல் சாமியார்களுக்கு வேறு வாரி வழங்குகிறார்கள். சாமியார்களை தரிசிக்க வேறு வகை வகையாய் கட்டணங்கள். அவருக்கு பாத பூஜை செய்ய தனி கட்டணமாம். பக்கத்தில் சென்று பார்க்க ஒரு கட்டணமாம். தூரத்தில் நின்று பார்க்க ஒரு கட்டணமாம். என்னை கொடுமை இது? கொண்டு போய் கொட்டுகிறார்கள். கண் முன்னே கண்டிருக்கிறேன் இந்த காட்சிகளை எல்லாம். அப்போது எல்லாம் என் மனதில் படிக்க வேண்டிய வயதில் குப்பை பொறுக்கும் சிறுவர்களும், தேநீர் கடைகளில் கோப்பைகளை கழுவும் சிறுவர்களும் தான் வந்தார்கள்.



எதற்காக? சாமிக்கு எதற்காக இத்தனை செய்கிறார்கள்?



அவர்களின் எதாவது ஒரு விருப்பம் நிறைவேறி இருக்கலாம்.

நினைத்தது கிடைத்து இருக்கலாம்.

வசதி பெருகி இருக்கலாம்.

பெருமைக்காக செய்யலாம்.

பயந்து போய் செய்யலாம்.



காரணங்களையும் அடுக்கிக்கொண்டே போகலாம்.



ஆனால்,



இதை எல்லாம் விட தன் சக மனிதனின் துயர் துடைக்கலாமே....!



சாமி, கோவில் என செல்வங்களை வழங்குவதை விட கண்முன்னே துயர்படும் மக்களுக்கு கொடுத்து உதவலாமே!



உணவின்றி உயிர் விடும் சக மனிதனுக்கு உதவலாம்.



படிக்க வசதி இல்லாத குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்விக்காக சிறு உதவிகள் செய்யலாம்.



ஆதரவற்ற முதியோர் , குழந்தைகளின் நல்வாழ்வுக்கு உதவலாம். அந்த குழந்தைகளை படிக்க வைக்கலாம்.



தானமாக கொடுக்காவிட்டாலும் நான்கு பேருக்கு வருமானம் ஈட்டும் வகையில் ஏதேனும் உதவிகள் செய்யலாம்.



திருந்துவார்களா?

நன்றி
அக்னித் தமிழச்சி
அன்புடன் சக்தி

Monday, October 10, 2011

இளமைலேயே முதுமை அடைந்த நவீன ஔவையார்

இளமைலேயே முதுமை அடைந்த நவீன ஔவையார்
வயோதிக தோற்றத்திற்கு காரணமே வயதாகுதல் தான். ஆனால் இவருக்கு நடந்த நிகழ்வைப் பார்ப்போம். வியட்நாம் நாட்டை சேர்ந்தவர் 26 வயதான இளம் பெண்மணி Phuong எனும் அழகி.
















இந்த பெண்மணி கடந்த 2008 ம் ஆண்டு கடலுணவு வகைகளை அதிகம் சாப்பிட்டுள்ளார். இதன் பின்னர் இவரது முகம் வீங்கி ஒவ்வாமை நிலைக்கு ஆளாகியுள்ளார்.







இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட இவர் தனது கணவரான 34 வயதான Nguyen Thanh Tuyen என்பவரது உதவியுடன் வைத்திரை நாடியுள்ளார். பின்னர் வைத்திய சிகிச்சைக்காக சென்ற பெண்மணி டாக்டர்களின் ஆலோசனைக்கு அமைய ஒவ்வாமை மருந்துகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்துள்ளார். உட்கொண்டு பலனளிக்காததால் 2009 ம் ஆண்டு தான்பயன்படுத்திய அனைத்து மருந்துகளையும் நிறுத்திக்கொண்டார்.







ஆனால் அதன் விளைவு தற்போது பெண்ணின் உருவம் 70 வயது கிழவி போன்று மாறிவிட்டது. இதுபற்றி இந்த பெண் கருத்த தெரிவிக்கையில்:- எனக்கு இதுவரை எந்த குழந்தைகளும் இல்லை.



ஆனால் என் முகம் வயதானாலும் வயிறு அதிக குழந்தைகள் பெறக்கூடிய இளமையாகத்தான் இருக்கிறது. மேலும் நான் விகாரம் அடைந்தாலும் என் கணவர் என்னை அன்பாக கவனித்து வருகிறார் என்று குறிப்பிட்டார்.

அன்புடன் சக்தி

Sunday, October 09, 2011

அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன?

அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன. கண்கள்ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. அதனால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால், அன்றைய தினம் நல்லெண்ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்யமாக இருக்கும். மனஅழுத்தம் இல்லாமலும், பரபரப்பில்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண்விழிப்பதாகும்.உஷத்காலம் உஷஸ் என்னும் பெண்தேவதையைப்பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறான். இதனாலேயே விடியற்காலை நேரம் உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால்தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விசேசமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணிவரை.



அன்புடன் சக்தி
நன்றி தினமலர்