சிவகங்கை,: சிங்கம்புணரியில் பிறந்த உடன் குடல் வெளியே தெரிந்த சிறுவனின் ஆப்பரேஷனுக்கு நிதியின்றி, அவனது தாய் தவித்து வருகிறார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவரது மனைவி வனிதா. இவர்களது மகன் மணிசர்மா(4). இவர், சிங்கம்புணரியில் உள்ள தனியார் கிளினிக்கில் பிறந்தபோது தோல் மென்மையாக இருந்துள்ளது. இதனால், வயிற்றுக்குள் இருந்த குடல் வெளியே தெரிந்துள்ளது. நாளைடைவில், இவரது குடல் பெருத்து வயிறு வீங்கியது. பயந்துபோன வனிதா, மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சிறுவனை அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுவனின் 2 வயதில் ஆப்பரேஷன் செய்துள்ளனர். மீண்டும், சிறுவனின் வயிறு பெருத்துக்கொண்டே இருந்தது.

உதவ விரும்புவோர், 96261 - 08933-ல் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி
தினமலர்
No comments:
Post a Comment