Thursday, January 24, 2013

கருப்புச்சாமியின் அதிசய நீருற்று

மேலூர், : கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பால்குடியில் கிடைத்திருக்கும் அதிசய நீருற்று 18 பட்டி கிராம மக்களின் வறட்சியை போக்கும் அட்சய பாத்திரமா விளங்குகிறது.


கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிரயான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது பால்குடி கிராமம். இங்குஅறிவி மலை உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் உள்ள கருப்பர் கோயில் அருகில் தரையில் ஒரு ஆடி ஆழத்தில் ஒரு அடி அகலத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. இப் பள்ளத்திலிருந்து ஊற்று தண்ணீர் வற்றாமல் வந்துகொண்டே இருக்கிறது. கடுமையான வறட்சி காலங்களில் கூட தண்ணீர் வற்றுவது கிடையாது.

பட்டூர், வெள்ளுத்துப்பட்டி, பால்குடி, கலப் பாறை, அய்வத்தாம்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தினமும் டூ வீலர் மற்றும் சைக்கிள்களில் வந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர். தண்ணீர் பால் போன்ற சுவையுடன் உள்ளதால் குடிப்பதற்கும் சமையலுக்கும் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

தினமும் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் தண்ணீர் பிடித்தாலும் வற்றாமல் வந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் தண்ணீர் பிடித்தது போக மற்ற நேரங்களில் ஊறும் தண்ணீரை பால்குடி பொதுமக்கள் கண்மாயில் தேக்கி வைக்கின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளின் தாகமும் தீர்க்கப்படுகிறது.

மிச்சப்படும் தண்ணீரை கொண்டு பருவத்தில் உள்ள பயிர்களின் விளைச்சலுக்கு தேவைப்படும் கடைசி தண்ணீராகவும் பயன்படுத்துகின்றனர்.

கிராமத்து நாட்டாமை கருப்புச்சாமி கூறுகையில், க்கருப்பசாமி அருளால் எங்களுக்கு இந்த அதிசய நீருற்று கிடைத்திருக்கிறது. இத் தண்ணீரை பருகுவதால் எங்களுக்கு நோய் நொடிகள் வராது. 18 கிராம மக்களின் உறவினர்கள் வீடுகள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு கூட இந்த தண்ணீரை கொடுத்தனுப்புகிறோம். இவ்விடத்துக்கு அருகில் நூற்றுக்கணக்கான அடியில் உள்ள கிணறுகள் கூட தண்ணீரின்றி வறண்டு கிடக்கிற அதே வேளையில் எங்களுக்கு எல்லா காலங்களிலும் தண்ணீர் கிடைக்கும் அதிசய நீருற்று கிடைத்திருக்கிறது என்கிறார்.





அன்புடன் சக்தி

Thursday, November 22, 2012

யார் இந்தஅஜ்மல் கசாப்?


  கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக படகு மூலம் மும்பையில் ஊடுருவிய லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள், ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து 60 மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படையினர், வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். இதில் 9 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.  இதில்  உயிருடன் பிடிபட்டவன்தான் இந்த கசாப்.

அஜ்மல் கசாப், பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பரித்கோட் என்ற கிராமத்தில் 1987, செப்.,13ம் தேதி பிறந்தான். முழுப்பெயர் முகமது அஜ்மல் அமீர் கசாப். பெயர் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பல பெயர்களில் இவன் அழைக்கப்பட்டான். பெற்றோர் ஷாபன் கசாப், நூர் இலாஹி. தந்தை பானி பூரி வியாபாரி. கசாபுக்கு இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.

2005ம் ஆண்டு, தந்தையுடன் சண்டையிட்டு, வீட்டை விட்டு வெளியேறினான். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தான். இவனுடன், 24 பேருக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டது. முதலில் உளவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்பட்டு, பின், படிப்படியாக நவீன ஆயுதங்களை கையாளுதல், இலக்கை தாக்குதல், கடலில் பயணம் செய்தல், நீச்சல், பாய்மர படகை இயக்குதல் போன்ற பயிற்சிகள் தரப்பட்டன.பயிற்சி பெற்ற குழுவிலிருந்து, சிறந்த 10 பேரை தேர்வு செய்து, மும்பை தாக்குதலை நடத்தினர். இதற்காக கசாப்புக்கு, 1.5 லட்சம் ரூபாய்

கொடுக்கப்பட்டது.

Monday, November 19, 2012

துபாயில் அடுக்கு மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

Jumeirah Lake Towers (JLT
துபாயில்,34அடுக்கு மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.துபாயில், "ஜுமிரா லேக் டவர்ஸ்' என்ற கட்டடத்தில், நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 34 அடுக்குகள் கொண்ட இந்த கட்டடத்தில் தங்கியிருந்தவர்கள், உடனடியாக மீட்கப்பட்டனர்.
எனவே, யாரும் காயமடையவில்லை. ஆனால், கட்டடத்தில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமாயின.மேலும் கட்டடத்தின் கீழே இருந்த கார்களும் சேதமானது . தீ விபத்துக்கான காரணம் குறித்து, விசாரணை நடக்கிறது




அன்புடன்
சக்தி

Wednesday, November 14, 2012

‘தீபாவளி ஸ்பெசல்' லேகியம்

தீபாவளிக்கு எண்ணெய் பலகராமும், நெய்யில் செய்த பட்சணங்களையும் ஒரு கட்டு கட்டியிருப்போம். திடீரென்று அதிக அளவில் எண்ணெய் பலகாரங்களை சாப்பிட்டதால் வயிறு கடா முடா என்று ஒரு வழி செய்து விடும். அஜீரணக் கோளாறு வேறு அவஸ்தையை ஏற்படுத்திவிடும். இதில் இருந்து தப்பிக்க கைவசம் ‘தீபாவளி ஸ்பெசல்' லேகியம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவேண்டும் என்கின்றனர் அனுபவஸ்தர்கள்.


தீபாவளி லேகியம் செய்ய தேவையானப் பொருட்கள்
பெருங்காயம் - 25 கிராம்பேரிச்சை - கால் கிலோ
வெல்லம் - 100 கிராம்சீரகம் - 3 டீ ஸ்பூன்வால்மிளகு - 2திப்பிலி - 2
நெய் - 25
உப்பு - கால் டீ ஸ்பூன்
செய்முறை
பேரிச்சையை சுடுதண்ணீரில் நன்கு ஊறவைத்து, கொட்டையை நீக்கி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
வெல்லம் தவிர சீரகம், திப்பிலி, வால்மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை பொடி செய்யவும்.
அடுப்பில் கடாயை வைத்து வெல்லத்தை பொடித்து போடவும். நெய் சேர்த்து கரைந்த உடன் பேரிச்சையை போடவும். இதனுடன் பொடித்து வைத்துள்ள கலவையைப் போட்டு கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். உப்பு சேர்த்து நன்கு கிளறவேண்டும். கலவை திரண்டு திக்காகி அல்வா பதம் உடன் இறக்கி ஆறவைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
தீபாவளி லேகியம் சாப்பிடுவதன் மூலம் அஜீரணம் ஏற்படாது, வயிறுப் பொருமல் இருக்காது. சளி பிடிக்காது.
இதேபோல் மிளகு, இஞ்சி, ஓமம், திப்பிலி, கொத்தமல்லி, மஞ்சள்தூள், கசகசா, இலவங்கம், ஏலம், வெல்லம், நெய், நல்லெண்ணெய் சேர்த்து வேறு விதமாகவும் தீபாவளி லேகியம் செய்யலாம்.
தீபாவளி லேகியம் கையில் இருந்தால் தைரியமாக தீபாவளி பலகாரத்தை ஒரு பிடி பிடிக்கலாம்.
அன்புடன்
 சக்தி

Friday, November 09, 2012

இஸ்லாமியர்களுக்கு எதிரான படமா விஸ்வரூபம்? - கமல் பதில்

எந்த மதத்துக்கும் நான் எதிரி இல்லை. விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதில்லை, என்று கமல்ஹாஸன் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் படம் ‘ஆரோ 3டி' ஒலி தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. டிரெய்லரை வெளியிட்டு கமலஹாசன் நிருபர்களிடம் பேசுகையில், விஸ்வரூபம்' இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான படமா? என்று கேட்டனர்.

அதற்கு கமல் பதிலளிக்கையில், "அப்படி நான் படம் எடுப்பேனா? இந்த படம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்லது. இந்தியாவில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனபதே என் விருப்பம்.
நான் காந்தியின் பக்தன். இங்கு எந்த மதத்தினர் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டேன். மனிதர்களைத்தான் பார்க்கிறேன். மதங்களை கொண்டாடுவது இல்லை. மனிதர்களை கொண்டாடுகிறேன். எந்த மதத்தினரையும் வித்தியாசமாக பார்ப்பது இல்லை. இந்த படமும் அப்படித்தான் இருக்கும். காந்தீய வழியிலேயே எனது அணுகுமுறைகளும் இருக்கும்," என்றார்.
அன்புடன்
 சக்தி