Friday, February 03, 2012

டைட்டானிக் கப்பல்பற்றிய புதிய செய்தி (படங்கள் இணை ப்பு)

அட்லான்டிக் கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கி 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி சமீபத்தில் டைட்டானிக் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதுகடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதி இங்கிலாந்தின் சவுதாம்டன் பகுதியில் இருந்து டைட்டானிக் சொகுசு கப்பல் நியூயார்க் புறப்பட்டது.



உலகிலேயே மிக பிரமாண்டமான முதல் சொகுசு கப்பலான டைட்டானிக் தனது முதல் பயணத்திலேயே வடக்கு அட்லான்டிக் கடலில் மிகப்பெரிய பனிப்பாறையில் 15ம் திகதி மோதி விபத்துக்குள்ளானது. கப்பலில் பயணம் செய்த 2,223 பேரில் 1517 பேர் உயிரிழந்தனர். இது உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய கப்பல் விபத்தாக இன்றளவும் உள்ளது.

கடந்த 1997ம் ஆண்டு வெளிவந்து உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் டைட்டானிக். உலக புகழ் பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியனார்டோ டிகாப்ரியோ, கேத் வின்ஸ்லெட் உள்பட பலரும் நடித்த படம்.


இதில் ஒரு காட்சியில் கப்பல் உடைய தொடங்கிய பிறகு பயணிகள் பீதியுடன் இங்கும் அங்கும் ஓடுவார்கள். உயிர் பிழைப்பதற்காக மீட்பு படகுகளில் ஏறுவார்கள். அப்போதுகூட கப்பலின் பேண்ட் வாத்திய குழுவினர் பதற்றப்படாமல் வயலின் வாசிப்பார்கள்.கப்பல் மூழ்கும் வரை அவர்களது இசை தொடரும். இது வெறும் காட்சி மட்டுமல்ல உண்மையான நிகழ்வு ஆகும். பேண்ட் வாத்திய கலைஞர்கள் 8 பேர் கடைசி வரை இசைக் கருவிகள் வாசித்ததாக அப்போது பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. அப்போது மூழ்கிய வயலின் தற்போது கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை அக்கப்பலில் இருந்த பேண்ட் மாஸ்டர் வாலஸ் ஹர்ட்லி பயன்படுத்தி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

வாலஸ் ஹர்ட்லி என்ற இசைக் கலைஞர், தனது வயலினை அணைத்த நிலையிலேயே கடலில் மூழ்கினார். அந்த நிலையிலேயே அவரது உடல் மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அந்த வயலின்தான் தற்போது கிடைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்தை சேர்ந்த ஒருவரிடம் இந்த வயலின் பல ஆண்டு காலமாக இருந்துள்ளது. வாலசுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண் மரியா ராபின்சன், டைட்டானிக் விபத்து நடந்த சில ஆண்டுகளில் இதை தன்னிடம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். டைட்டானிக் வயலின் குறித்த இதர தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.






No comments: