Friday, August 10, 2012

மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..

லண்டன்: மனிதர்களின் உயிரியல் பெயர் ஹேமோ சேப்பியன்ஸ் (Homo sapiens).




பரிணாம வளர்ச்சியில் ஒரு செல் உயிரிகளில் இருந்து பல வகையான உயிர்கள் உருவாயின என்பது டார்வினின் கொள்கை.



அவ்வாறாக 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இப்போதைய மனித இனமான ஹேமோ சேப்பியன்ஸ் உருவானது என்கிறது பரிணாம விதி எனப்படும் evolution theory.



ஆனால், அப்போது ஹேமோ சேப்பியன்ஸ் மட்டுமல்ல, மேலும் ஒரு மனித இனமும் இருந்தது என்பதை இப்போது கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.



கென்யா நாட்டின் துர்கானா ஏரியின் படுகையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மனித இனத்தின் எலும்புக் கூடுகளின் படிமங்கள் (fossil) கிடைத்துள்ளன.



துர்கானா ஏரிப் பகுதியில் தான் ஏராளமான மிகப் பழமையான மனித உடல்களின் படிமங்கள் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன. இதனால் இந்தப் பகுதிக்கு 'மனித குலத்தின் தொட்டில்' (cradle of mankind) என்ற பெயரே உண்டு.



இங்கு இப்போது கிடைத்துள்ள மனித உடல் படிமங்களை ஆராய்ந்ததில், அவை ஹேமோ சேப்பியன்ஸ் இனத்தின் படிமம் அல்ல என்பது தெரியவந்துள்ளது. மாறாக அவை மனித இனத்தின் இன்னொரு வகையான உயிர் என்பது தெரியவந்துள்ளது.



ஏற்கனவே 40 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற ஒரு படிமும் கிடைத்து. அதற்கு '1470' என அடையாளப் பெயர் சூட்டப்பட்டது. இப்போது மீண்டும் அதே போன்ற ஒரு படிமம் கிடைத்துள்ளது.



இந்த மனித வகையினரின் மூளை மிகப் பெரிதாக இருந்துள்ளதும், தலை நீண்டு இருந்ததும், அதே நேரத்தில் முகம் வட்ட வடிவமின்றி ஒடுங்கி இருந்ததும், கீழ் தாடை மிக மிக பலமானதாகவும் இருந்ததும் தெரியவந்துள்ளது.



மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படுபவை ஹோமோ எரெக்டஸ் (Homo erectus), ஹேமோ ஹபிலிஸ் (Homo habilis) ஆகியவை. இதிலிருந்து பரிமாண வளர்ச்சி அடைந்தே ஹேமோ சேப்பியன்ஸ் என்ற இப்போதைய மனித இனம் உருவானது.






இந் நிலையில் இப்போது கிடைத்துள்ள படிமங்களை ஆராய்ந்ததில் அது இன்னொரு வகையான மனித இனம் என்பது உறுதியாகியுள்ளது. இதற்கு Homo rudolfensis என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முன்னணி உயிரியல் அகழ்வாராய்ச்சி விஞ்ஞானியான பேராசிரியர் மீவ் லீக்கி தலைமையிலான டீம் தான் இந்த படிமத்தை துர்கானா ஏரியின் 10 கி.மீ. தொலைவில் தோண்டியெடுத்துள்ளது. இதற்கு Homo rudolfensis என பெயர் சூட்டியுள்ள இந்தக் குழு, இந்தப் படிமங்கள் 1.78 மில்லியன் முதல் 1.95 மில்லியன் ஆண்டுகள் வரை பழமையானது என்றும் கூறியுள்ளது.
கீழ் தாடை மிக பலமானதாகவும், முகம் ஒடுங்கியும் இருப்பதைப் பார்த்தால், இந்த இனம் கடிப்பதில் மிக சிறந்ததாக இருந்திருக்க வேண்டும். இந்த இனமும் ஹோமோ சேப்பியன் மனித இனமும் ஒரே காலகட்டத்தில் வசித்துள்ளனர் என்கிறார் மீவ் லீக்கி.

இந்த ஹோமோ எரெக்டஸ், ஹேமோ ஹபிலிஸ், ஹோமோ ருடால்பெனிஸ், ஹோமோ சேப்பியன்ஸ் ஆகிய எல்லா இனங்களுமே சிம்பன்சிக்கள், போனோபோஸ் ஆகிய குரங்கு இனங்களில் இருந்து தான் உருவாயின என்பது தான் பரிணாம விதி சொல்லும் கோட்பாடாகும்

அன்புடன்
 சக்தி

வளைகுடா நாடுகளில் பணிபுரிய ‌நேபாள பெண்களுக்கு தடை

  காத்மாண்டு: 30வயதுக்‌கு கீழ் உள்ள பெண்கள் வளைகுடா நாடுகளுக்கு சென்று பணி புரிவதற்கு நேபாள அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கிஷோர் ‌யாதவ் கூறியதாவது: நேபாள நாட்டைச்சேர்ந்த 30 வயதுக்கும் குறைவான பெண்கள் பெரும்பாலானோர் வளைகுடா நாடுகளில் வீட்டு பணிப்பபெண்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அங்கு பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக தொடர்ந்து புகார் வருவதையடுத்து அமைச்சரவை இம் முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ‌‌ வளைகுடா நாடுகளில் நேபாள நாட்டு பெண்கள் தவிர இலங்கை , பிலிப்பைன்ஸ் போன்ற நாட்டை சேர்ந்த பெண்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். நேபாள நாட்டு அரசு மட்டு‌மே 30 வயதுக்குட்பட்ட பெண்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிய தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஏற்கனவே இந்ததடை 1998 -ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கடந்த 2010-ம் ஆண்டு விலக்கிக்‌கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் அந்த தடை அமல்படுத்தபடுத்தப்பட்டுள்ளது.





அன்புடன்
 சக்தி

Thursday, July 26, 2012

மேலூரில் வாந்தி-வயிற்று போக்கு 70 பேர் பாதிப்பு

மேலூர் பகுதியில் வாந்தி-வயிற்று போக்கு காரணமாக 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.




அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலூரில் உள்ள அண்ணாகாலனி, முகமதியார்புரம், காந்திஜி பூங்கா ரோடு, நொண்டிகோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 70 பேருக்கு திடீரென வாந்தி-வயிற்று போக்கு ஏற்பட்டது. இவர்கள் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, இப்பகுதிகளில் குடிநீர் அசுத்தமாக வருகிறது. சுற்றுப்புற சுகாதாரமும் இல்லை. ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடப்பதால் கொசு தொல்லைகளும் அதிகரித்து உள்ளது. சுகாதாரமற்ற குடிநீரை குடிப்பதால் தான் இதுபோன்ற நோய் தாக்கப்படுகிறது. எனவே சுகாதாரதுறை அதிகாரிகள் உடனடியாக இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.



இதுபற்றி நகரசபை கமிஷனர் பாஸ்கரசேதுபதி கூறும்போது, வினியோகிக்கப்படும் தண்ணீர் சுத்தமாக தான் உள்ளது. இருப்பினும் தண்ணீரை ஆய்வுக்காக அனுப்பி இருக்கிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கெட்டுபோன மீன்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சமைத்து சாப்பிட்டதாலும், கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழத்தை சாப்பிட்டதாலும்தான் வாந்தி-வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கெட்டுபோன பொருட்களையோ கல் மூலம் பழுக்க வைத்த பழங்களையோ சாப்பிட வேண்டாம். கல் மூலம் பழுக்க வைத்த மற்றும் கெட்டுபோன பொருட்களை விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அன்புடன்
 சக்தி

யுடியூப்பில் இனி உண்மையான பெயரை வெளியிட வேண்டும்!




கூகுளின் பொழுதுபோக்குத் தளமான யுடியூப்புக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்களும் உறுப்பினர்களும் உள்ளனர். இந்த யுடியூப்பில் நினைக்கும் வீடியோக்களைப் பதிவேற்றம் செய்யலாம். மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களைப் பார்க்கலாம். அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். மேலும் அந்த வீடியோக்களுக்கு விமர்சனங்களும் எழுதலாம்.



ஒவ்வொரு நாளும் யுடியூப்பில் ஏராளமானோர் வீடியோக்களைப் பதிவேற்ற் செய்கின்றனர். அவ்வாறு பதிவேற்றம் செய்யும் போது ஒரு சிலர் தங்களது உண்மையான பெயர்களைக் குறிப்பிடுகின்றனர். ஆனால் பெரும்பாலோர் தங்களது புனைப் பெயர்களையேத் தருகின்றனர்.



மேலும் யுடியூப்பில் வரும் வீடியோக்களில் பெரும்பாலானவை ஆபாசமானதாகவும், அர்த்தமற்றதாகவும், இனவெறியைத் தூண்டுவதாகவும் உள்ளதாக ஏராளமான விமர்சனங்கள் வருகின்றன. இந்த வீடியோக்கள் பெரும்பாலும் புனைப் பெயர்களில் வருவதால் இதை பதிவேற்றம் செய்தவர்களைக் கண்டுபிடிப்பதும் கடினமாக இருக்கிறது.



ஆகவே தரமில்லாத மற்றும் அர்த்தமற்ற வீடியோக்களைக் களைய வேண்டும் என்பதற்காக கூகுள் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இனி யுடியூப்பில் எந்த வீடியோவை பதிவேற்றம் செய்தாலும் பதிவேற்றம் செய்பவர்கள் தங்களது உண்மையான பெயர்களைக் குறிப்பிட வேண்டும்.



மேலும் வீடியோக்களுக்கு விமர்சனம் எழுதுபவர்களும் தங்களது உண்மையான பெயர்களையே குறிப்பிட வேண்டும் என்று கூகுள் அறிவித்திருக்கிறது. அதற்காக அவர்கள் குகூள்+ல் சைன் அப் செய்ய வேண்டும்.



அவ்வாறு தங்களது உண்மையான பெயர்களை வெளியிட விரும்பாதவர்கள் ஒரு சில வாய்ப்புகளையும் வழங்குகின்றன. அதில் அவர்கள் தங்களுது பெயர்களை வெளியிடாததற்கான காரணங்களை அவர்கள் வெளியிட வேண்டியிருக்கும்.



இந்த அறிவிப்பின் மூலம் யுடியூப்பில் வீடியோக்களை வெளியிடுபவரைப் பற்றி கூகுள் அறிந்து கொள்ள விரும்புகிறது. மேலும் வரும் காலங்களில் யுடியூப்பில் பதிவேற்ற பெயரைக் குறிப்பிட வேண்டியது கண்டிப்பாகிவிடும் என்று தெரிகிறது.



எவ்வாறு பேஸ்புக்கில் உறுப்பினர்கள் தங்களது உண்மையான பெயர்களைக் குறிப்பிடுகிறார்களோ அதுபோன்றே யுடியூப்பிலும் நிகழ வேண்டும் என்று கூகுள் விரும்புகிறது. அது நடக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



அன்புடன்
 சக்தி

Wednesday, July 11, 2012

நீங்க சரியா சாப்பிடுறீங்களா?


நம் உடல், நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் பஞ்சபூதங்களால் ஆனது. நம் நாக்கிலேயே, பஞ்சபூதங்களும் உள்ளன. திடீரென காரமாக சாப்பிடத் தோன்றினால், நம் உடம்பில், காற்றின் அங்கம் குறைவாக உள்ளதென அர்த்தம். இதே போல், காரம், துவர்ப்பு காற்றின் அங்கம்; இனிப்பு நிலத்தின் அங்கம்; ஆகாயம் - புளிப்புத் தன்மை, நீருக்கு - உப்பு, நெருப்புக்கு - கசப்பு. பஞ்சபூதங்களின் என்ன தன்மைகள், நம் உடம்பில் குறைகிறதோ, அது தேவை என்பதை, நம் நாக்கு சொல்லும்.சாப்பிடும் போது, மெதுவாக, மென்று சாப்பிட வேண்டும். வாயின் இருபுறமும், உணவை நன்றாக பரப்பி மெல்ல வேண்டும். அப்போது தான், உமிழ்நீர் நன்றாக ஊறி, உணவுடன் இரண்டறக் கலந்து, செரிமானத்தை எளிதாக்கும். தண்ணீர் குடித்து, 15 நிமிடம் கழித்துத் தான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டிற்குப் பின், அரை மணி நேரம் கழித்துத் தான், தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்கும் போது, நன்றாக வாயில் பரப்பி, அமைதியாக ருசித்து குடிக்க வேண்டும்.எந்த ஒரு காய் சாப்பிட்டாலும், அடுத்து குறைந்தபட்சம், 11 நாட்களுக்கு அதை ஒதுக்க வேண்டும். ஒரே காய்கறியை தொடர்ந்து சாப்பிட்டால், ஒரே விதமான சத்து தான் உடலுக்கு கிடைக்கும். இன்று, உணவில் துவரம் பருப்பு சேர்த்தால், நாளை பாசிப் பருப்பு சேர்க்க வேண்டும்.சாப்பிடும் போது, இரண்டு உதடும் சேர்ந்தே இருக்க வேண்டும். உள்ளுக்குள்ளேயே உணவு நொறுங்க வேண்டும். சாப்பிடும் போது பேசினால், காற்று உள்ளே போய், உணவுடன் கலந்து, வாயு சேர்ந்துவிடும்.காலையில் யோகா, மூச்சுப் பயிற்சி செய்துவிட்டு, அரை எலுமிச்சம்பழம், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இதில், உடலுக்கு தேவையான இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, லேசான கசப்பு கிடைக்கும். இது, உடம்பின் பஞ்சபூத சக்தியை ஈடு செய்யும்.காலையில் சத்தான உணவு, மதியம் மிதமான உணவு, இரவு மிக லேசான உணவு. இது தான், உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க வைக்கும்!
                                                                                         உமா வெங்கடேஷ்
அன்புடன்                                                        நாடி சமன்படுத்துதல் மருத்துவர்
  சக்தி