Sunday, September 30, 2012

துபாய் மருத்துவமனையில் 3 ஆண்டுக்கும் மேல் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதியவர்

துபாய்: துபாய் மருத்துவமனையில் திருநெல்வேலி அருகேயுள்ள பாப்பையாபுரத்தைச் சேர்ந்த சுடலைமுத்து ராஜகோபால் ( வயது 71 ) எனற முதியவர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இருதய பாதிப்பு மற்றும் பக்கவாதத்தின் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) சார்பில் அதன் ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத் சந்தித்தார்.

திருநெல்வேலி அருகேயுள்ள பாப்பையாபுரத்தைச் சேர்ந்தவ சுடலைமுத்து ராஜகோபால். வயது 71. கடந்த 1976ம் ஆண்டு துபாய் வந்ததாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்படும் வரை டிரைவராக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார். தனக்கு பத்மா மற்றும் சுந்தராம்பாள் ஆகிய இரு மனைவிகள் இருப்பதாகவும் அவர்களில் மூத்த மனைவிக்கு ஐந்து குழந்தைகளும், இரண்டாவது மனைவிக்கு நான்கு குழந்தைகளும் இருப்பதாக தெரிவித்தார். மூத்த மனைவி பத்மா தன்னைக் காண துபாய் வந்திருப்பதாகவும், இரண்டாவது மனைவி சுந்தராம்பாள் புதுக்கோட்டையில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார். இவர் சிலநேரம் மனநலம் சரியில்லாதவரைப் போல் பேசுகிறார். எனவே இவர் கூறும் தகவல்கள் எந்த அளவு உணமையானது எனத் தெரியவில்லை.
ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி மற்றும் அதன் துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா ஆகியோரது முயற்சியில் இந்திய கன்சுலேட்டின் உதவியின் மூலம் தாயகத்தில் உள்ள அவரது குடும்பத்தினருடன் சேர்ப்பிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறு அவரை எவரும் ஏற்றுக்கொள்ள இயலாத பட்சத்தில் ஏதேனும் ஒரு ஆதரவற்றோர் இல்லம் தமிழகத்தில் ஏற்றுக்கொள்ள முன்வருமானால் அங்கு சேர்த்திட முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவரைப் பற்றிய முழு தகவல்கள் தெரிந்தவர்கள் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளை 050 51 96 433 / 050 467 43 99 எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்து உதவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

அன்புடன் சக்தி

Friday, September 14, 2012

பாவம் நடிகைகள்...!:

முன்பெல்லாம் சினிமாவில் கவர்ச்சி காட்டி நடிப்பதற்கென தனியாக சில காட்சிகளில் சில நடிகைகள் வந்து போவார்கள், அவர்களுக்கு கவர்ச்சி நடிகை என்றும் பெயர். ஆனால் இப்போது கதாநாயகிகளே போதும், போதும் என்று பயப்படுமளவிற்கு கவர்ச்சி காட்டி, நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். துட்டுக்கு ஏற்ற கவர்ச்சி என்பதால், மீட்டர் ஏற, ஏற உடுத்தியிருக்கும் உடையின் அளவு குறைவதுதான் கவலைக்குரிய அம்சமாகிவிட்டது. சினிமாவிற்கு பெரிய பட்ஜெட் போடுபவர்கள் நடிகைகளின் உடைகளுக்கு மட்டும் ‘துண்டு’ பட்ஜெட் போடுவதை பார்த்து வெறுத்துப் போன ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் இது.
அன்புடன்Photo Gallery
 சக்தி

மதுரையில் புல்லட் "தீ' வண்டி


 மதுரையில், தீயணைப்பு வண்டி சென்று அணைக்க முடியாத இடங்களில், புல்லட்டில் சென்று தீயை அணைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தீயணைப்பு வண்டியால் குறுகலான இடங்களுக்கு சென்று, உடனடியாக தீயை அணைக்க முடிவதில்லை. இதைதவிர்க்க, டூவீலரில் 9 லிட்டர் ரசாயனம் கலந்த நீரை எடுத்துச் சென்று, நுரையாக பீய்ச்சி அணைக்கும் முறை அறிமுகப்படுத்த தீயணைப்புத் துறை முடிவு செய்தது.

 தற்போதைக்கு தல்லாகுளம் நிலையத்திற்கு ஒரு புல்லட் "தீ' வண்டி வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.6.7 லட்சம். இதற்கென தனி வீரர் இன்னும் நியமிக்கப்படவில்லை. இதற்கும் தொடர்பு எண் 101 தான்
மதுரையில் பல பகுதிகள் குறுகலாகவும், சிறியதாகவும் இருப்பதால், உடனடியாக இதை அமல்படுத்த வேண்டிய அவசியம் என தினமலர் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக, புல்லட்டில் சென்று தீயை அணைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அன்புடன்
 சக்தி

Friday, August 10, 2012

மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..

லண்டன்: மனிதர்களின் உயிரியல் பெயர் ஹேமோ சேப்பியன்ஸ் (Homo sapiens).




பரிணாம வளர்ச்சியில் ஒரு செல் உயிரிகளில் இருந்து பல வகையான உயிர்கள் உருவாயின என்பது டார்வினின் கொள்கை.



அவ்வாறாக 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இப்போதைய மனித இனமான ஹேமோ சேப்பியன்ஸ் உருவானது என்கிறது பரிணாம விதி எனப்படும் evolution theory.



ஆனால், அப்போது ஹேமோ சேப்பியன்ஸ் மட்டுமல்ல, மேலும் ஒரு மனித இனமும் இருந்தது என்பதை இப்போது கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.



கென்யா நாட்டின் துர்கானா ஏரியின் படுகையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மனித இனத்தின் எலும்புக் கூடுகளின் படிமங்கள் (fossil) கிடைத்துள்ளன.



துர்கானா ஏரிப் பகுதியில் தான் ஏராளமான மிகப் பழமையான மனித உடல்களின் படிமங்கள் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன. இதனால் இந்தப் பகுதிக்கு 'மனித குலத்தின் தொட்டில்' (cradle of mankind) என்ற பெயரே உண்டு.



இங்கு இப்போது கிடைத்துள்ள மனித உடல் படிமங்களை ஆராய்ந்ததில், அவை ஹேமோ சேப்பியன்ஸ் இனத்தின் படிமம் அல்ல என்பது தெரியவந்துள்ளது. மாறாக அவை மனித இனத்தின் இன்னொரு வகையான உயிர் என்பது தெரியவந்துள்ளது.



ஏற்கனவே 40 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற ஒரு படிமும் கிடைத்து. அதற்கு '1470' என அடையாளப் பெயர் சூட்டப்பட்டது. இப்போது மீண்டும் அதே போன்ற ஒரு படிமம் கிடைத்துள்ளது.



இந்த மனித வகையினரின் மூளை மிகப் பெரிதாக இருந்துள்ளதும், தலை நீண்டு இருந்ததும், அதே நேரத்தில் முகம் வட்ட வடிவமின்றி ஒடுங்கி இருந்ததும், கீழ் தாடை மிக மிக பலமானதாகவும் இருந்ததும் தெரியவந்துள்ளது.



மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படுபவை ஹோமோ எரெக்டஸ் (Homo erectus), ஹேமோ ஹபிலிஸ் (Homo habilis) ஆகியவை. இதிலிருந்து பரிமாண வளர்ச்சி அடைந்தே ஹேமோ சேப்பியன்ஸ் என்ற இப்போதைய மனித இனம் உருவானது.






இந் நிலையில் இப்போது கிடைத்துள்ள படிமங்களை ஆராய்ந்ததில் அது இன்னொரு வகையான மனித இனம் என்பது உறுதியாகியுள்ளது. இதற்கு Homo rudolfensis என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முன்னணி உயிரியல் அகழ்வாராய்ச்சி விஞ்ஞானியான பேராசிரியர் மீவ் லீக்கி தலைமையிலான டீம் தான் இந்த படிமத்தை துர்கானா ஏரியின் 10 கி.மீ. தொலைவில் தோண்டியெடுத்துள்ளது. இதற்கு Homo rudolfensis என பெயர் சூட்டியுள்ள இந்தக் குழு, இந்தப் படிமங்கள் 1.78 மில்லியன் முதல் 1.95 மில்லியன் ஆண்டுகள் வரை பழமையானது என்றும் கூறியுள்ளது.
கீழ் தாடை மிக பலமானதாகவும், முகம் ஒடுங்கியும் இருப்பதைப் பார்த்தால், இந்த இனம் கடிப்பதில் மிக சிறந்ததாக இருந்திருக்க வேண்டும். இந்த இனமும் ஹோமோ சேப்பியன் மனித இனமும் ஒரே காலகட்டத்தில் வசித்துள்ளனர் என்கிறார் மீவ் லீக்கி.

இந்த ஹோமோ எரெக்டஸ், ஹேமோ ஹபிலிஸ், ஹோமோ ருடால்பெனிஸ், ஹோமோ சேப்பியன்ஸ் ஆகிய எல்லா இனங்களுமே சிம்பன்சிக்கள், போனோபோஸ் ஆகிய குரங்கு இனங்களில் இருந்து தான் உருவாயின என்பது தான் பரிணாம விதி சொல்லும் கோட்பாடாகும்

அன்புடன்
 சக்தி

வளைகுடா நாடுகளில் பணிபுரிய ‌நேபாள பெண்களுக்கு தடை

  காத்மாண்டு: 30வயதுக்‌கு கீழ் உள்ள பெண்கள் வளைகுடா நாடுகளுக்கு சென்று பணி புரிவதற்கு நேபாள அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கிஷோர் ‌யாதவ் கூறியதாவது: நேபாள நாட்டைச்சேர்ந்த 30 வயதுக்கும் குறைவான பெண்கள் பெரும்பாலானோர் வளைகுடா நாடுகளில் வீட்டு பணிப்பபெண்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அங்கு பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக தொடர்ந்து புகார் வருவதையடுத்து அமைச்சரவை இம் முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ‌‌ வளைகுடா நாடுகளில் நேபாள நாட்டு பெண்கள் தவிர இலங்கை , பிலிப்பைன்ஸ் போன்ற நாட்டை சேர்ந்த பெண்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். நேபாள நாட்டு அரசு மட்டு‌மே 30 வயதுக்குட்பட்ட பெண்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிய தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஏற்கனவே இந்ததடை 1998 -ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கடந்த 2010-ம் ஆண்டு விலக்கிக்‌கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் அந்த தடை அமல்படுத்தபடுத்தப்பட்டுள்ளது.





அன்புடன்
 சக்தி