Friday, September 14, 2012

மதுரையில் புல்லட் "தீ' வண்டி


 மதுரையில், தீயணைப்பு வண்டி சென்று அணைக்க முடியாத இடங்களில், புல்லட்டில் சென்று தீயை அணைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தீயணைப்பு வண்டியால் குறுகலான இடங்களுக்கு சென்று, உடனடியாக தீயை அணைக்க முடிவதில்லை. இதைதவிர்க்க, டூவீலரில் 9 லிட்டர் ரசாயனம் கலந்த நீரை எடுத்துச் சென்று, நுரையாக பீய்ச்சி அணைக்கும் முறை அறிமுகப்படுத்த தீயணைப்புத் துறை முடிவு செய்தது.

 தற்போதைக்கு தல்லாகுளம் நிலையத்திற்கு ஒரு புல்லட் "தீ' வண்டி வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.6.7 லட்சம். இதற்கென தனி வீரர் இன்னும் நியமிக்கப்படவில்லை. இதற்கும் தொடர்பு எண் 101 தான்
மதுரையில் பல பகுதிகள் குறுகலாகவும், சிறியதாகவும் இருப்பதால், உடனடியாக இதை அமல்படுத்த வேண்டிய அவசியம் என தினமலர் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக, புல்லட்டில் சென்று தீயை அணைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அன்புடன்
 சக்தி

No comments: