Friday, January 13, 2012

அழியும் நிலையில் உள்ள அதிசயப் பாம்பு

பாம்பைப் பற்றி ஏராளமான சுவையான தகவல்கள் உண்டு



 பாம்பென்றால் படையும் நடுங்கும்
“பாம்புக்கு காதே இல்ல, ஆனா நம்ம எல்லாரையும் விட அதிகமா சப்தங்கள உணர்ற சக்தி அதுக்கு இருக்கு!”



“பாம்புகளுக்கு மூக்கே கிடையாது, ஆனா வாசனை நாற்றங்கள மிகச்சரியா உணர்ற திறன் இருக்கு!”



மாடுகளுக்கு கொம்பு  இருப்பதைப் பார்த்திருப்பிர்கள் .ஆனால் பாம்புக்கு  கொம்பு இருப்பதை எங்காவது   கேள்விப்பட்டதுண்டா?ஆப்பிரிக்க நாடான தான்சானியா காட்டு பகுதியில்ஆய்வு பணிகளை மேற்கொண்ட வனவிலங்கு ஆய்வாளர்கள்  கொம்பு முளைத்த பாம்பு ஒன்று நடமாடுவதை பார்த்தனர்



இந்த பாம்பு 2 அடி நீளம் உள்ளது. கறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. கண்ணுக்கு நேராக மேல் பகுதியில் கொம்புகள் முளைத்துள்ளன. எதற்காக பாம்புக்கு கொம்பு இருக்கிறது என்று தெரியவில்லை.





கண்ணை பாதுகாப்பதற்கும், இறைகளை கவர்வதற்கும் கொம்புகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் இது அழியும் இனவகை பாம்பாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தியாவிலே 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்களே நச்சுடையவை








.  

அன்புடன் சக்தி  

No comments: